அம்பாறை மாவட்ட முன்பள்ளிப் பிள்ளைகளின் விடுகை விழா


அம்பாறை மாவட்டம் ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் அம்மன் முன்பள்ளியும், அகத்திக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள லோட்டஸ் முன்பள்ளியும் இணைந்து 2013/2014 காலப்பகுதியில் முன்பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்து அடுத்த வருடம் தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளைகளுக்கு   சான்றிதழ்கள், பரிசில்கள், வழங்கி கௌரவித்து வழியனுப்பும் விடுகை விழா  நிகழ்வு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் நிதி அனுசரணையில் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் 28.11.2014ம் திகதி அம்மன் இல்லக் கட்டிடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அம்மைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் திரு அலன் போல் அவர்களும் அவரது குழுவினரும், திருக்கோவில் வலயக் கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திரு. எஸ். தர்மபாலன், முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.உஜேந்தன், சொலிடாரி பவுண்டேசன் அமைப்பின் திட்ட பணிப்ப்பளரும், கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பளருமான வே. வாமதேவன், திட்ட ஆலோசகரான திரு. மு. மொனாஸ், அம்மன் இல்ல முகாமையாளர் திருமதி தி.கோகிலா, அம்மன் முன்பள்ளி ஆசிரியர்களான  திருமதி. எம். புவிதா, செல்வி. ரி. ஜென்சுபாணி, லோட்டஸ் முன்பள்ளி  ஆரியர்களான செல்வி டிலோன் பாத்லெட், செல்வி அ. கௌதமி  மற்றும் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது