கல்முனை நீலாவனை சுனாமி மாடி வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீட்டொன்றில்
ரூபா 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக கல்முனை
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். .சதாத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு வீட்டு நபர்கள் உறங்கிய பின்னர் ஜன்னலை உடைத்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
மொரட்டுவ பல்கலைக்கழகம் TV Derana உடன் இணைந்து "Mora Lenz Media Awards 23" எனும் அகில இலங்கை அறிவிப்பு மற்றும் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்தது. இலங்கையில் உள்ள 30ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் சார்பாக 2000ற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் முதல் கட்டத்தில் நுழைய கலந்து கொண்டனர். 2வது கட்டத்தில், 40 பங்கேற்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிக்கட்டத்திற்கு 10 இளங்கலை மாணவர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். University of Vocational Technology - Ratmalana பல்கலைக்கழகம் சார்பில் A.G.Mohamed Ajeeth இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி மிகவும் பெறுமதியான அகில இலங்கை- முதன்மை ஆங்கில அறிவிப்பாளர் சான்றிதழையும் பெற்றுக்கொடுத்தார்.
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் என் . எஸ் .எஸ் . அமீர் அலி நியமிக்கபட்டுள்ளார் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியதீன் அவருக்கான நியமன கடிதத்தை நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கையளித்துள்ளார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் சட்டத்தரணி வை .எல் .எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் முன்னால் அமைச்சர் அமீர் அலி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார் இவரின் தோல்விக்கு அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்க பட்டமை காரணமாக தெரிவிக்கபட்டது குறிபிடத்தக்கது
மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று கல்முனையில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம் பெற்றது. அஸ்ரப் அழியா பொக்கிஷம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார். இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான் பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சமூகத்தினுள் காட்ட முற்பட்ட போ
Comments
Post a Comment