இராஜ கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு


கல்முனை மாநகர் ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர்  ஆலய புனராவர்த்தன இராஜ  கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு  நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை (17) இடம் பெறும் .

பஞ்சமி திதியும் விஷாக நட்சதிரமும்  இடப லக்கினமும் கூடிய  நேரம் காலை 9.19 முதல் 10.49மணி  வரையான  சுப முகூர்த்தத்தில்  ஆலய இராஜ கோபுரம் திறந்து வைக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடை பெறும் .
வியாழக்  கிழமை மாலை நாளை (16) விநாயகர் வழிபாடு, புண்ணியவாசனம் சாந்திக்கு கிரியைகள் என்பன நடை பெற்று  இன்று வெள்ளிக்கு கிழமை காலை 7.30 மணிக்கு விநாயகர் வழிபாடு  புண்ணியவாசனம் , யாக மண்டப பூசை ,விசேட தீபாராதனை ,வேத தோத்திர,நாத கீத  மங்களங்கள் முழங்க  குறித்த நேரத்தில் இராஜ கோபுர  கும்பாபிஷேகம்  நடைபெற்று  பிரசாதம் வழங்கப் படும் .

புனராவர்த்தன  இராஜ கோபுர  கும்பாபிஷேக கிரியைகள்  ஈசான சிவாச்சாரியார்  சிவா ஸ்ரீ மோஹானந்தக்  குருக்கள் தலைமையில் நடை பெறும் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி