களவாடிய கள்வன் கடித்தும் அவனை மடக்கிப் பிடித்து கட்டிவைத்த தைரியப் பெண்

களவாட வந்த கள்வன் ஒருவனை  வீட்டுக்குள் வைத்து  பிடித்து அவனுடன் சண்டை செய்து அவனிடமிருந்து கடியும் வாங்கி  அவனை  கட்டிவைத்து  பொலிசாரிடம் ஒரு பெண் ஒப்படைத்துள்ளார் .
இந்த சம்பவம் இன்று புதன் கிழமை அதிகாலை 3.00 மணிக்கு  கல்முனைக் குடி கடற்கரைப் பள்ளி  வீதியில்  வீடொன்றில் இடம் பெற்றுள்ளது .

சம்பவம் தொடர்பாக வீட்டுரிமயாளரான  குறித்த பெண் விபரிக்கயில்  நான் தூங்கிக் கொண்டிருக்கும் சமயம்  ஒரு சத்தம்  கேட்டது  அப்போது கண்விழித்தேன்  என் முன்னால்  ஒருவர் நடமாடுவது தெரிந்தது . அவர்  அங்கும் இங்கும்  நடமாடி  ஏதோ தேடிக் கொண்டிருந்தார் . நான்  நினைத்தேன்  தனது பிள்ளைகள் நித்திரையில் இருந்து எழும்பி ஏதும் தேடுகின்றார்கள்  என்று. பின்னர் எனக்கு  இவர் கள்வர்தான் என்பதை  உணர முடிந்தது . எனக்கு சத்தம் போடவும் பயமாக இருந்தது . ஏதாவது  நடந்து விடும் என்ற பயத்தினால் நடுங்கிய வண்ணம்  பார்த்துக் கொண்டே தூங்குவது போன்று பாசாங்கு செய்தேன் .  இவர் தேடுவதைப் பார்த்தல் இவருக்கு  பணம்தான் தேவையாக இருந்திருக்கும்  என்று  மனதுக்குள் நினைத்தேன் . அந்த நேரம் மேசையின் மேலே  இருந்த 300 ரூபா பணத்தை எடுத்துக்  கொண்டு  என் அருகே வந்து  என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை  அறுப்பதற்கு கையை நீட்டிய போது  வசமாக அவரை  இறுக்க பிடித்துக் கொண்டே அதன் பின்னர்  சத்தம் போட்டேன் . இதனிடையே  எனது பிடியில் இருந்து  தப்புவதற்கு எனது வலது  பக்க தோள்பட்டையில்  சரமாரியாக  கடித்தான்  அதனையும் பொருட்படுத்தாது  நானும்  என் கணவரும்  பிள்ளைகளும் சேர்ந்து அந்தக் கள்வனை கட்டிவைதோம் என  அந்தப் பெண் தெரிவித்தார் .

வீட்டு மொட்டைமாடிக்குமேல் ஏறி  கொள்ளையிட வீட்டுக்குள் இறங்கிய  அந்தக் கள்வனுக்கு 15 வயது  இருக்கும் . கையும் மெய்யுமாக  பிடிக்கப் பட்ட கள்வன்  கல்முனை  பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளார் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி