நிந்தவூர் பிரதேச சபை வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை இன்று காலை 10.15 மணியளவில் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை சபையில் சமர்ப்பித்தார்.
இதன் போது வரவு-செலவு திட்டம் பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். 

உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி கருத்துத் தெரிவிக்கையில் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கு நான் ஆதரவுமில்லை. எதிர்ப்புமில்லை. எனத் தெரிவித்தார். தான் நடுநிலைமை வகிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து வரவு-செலவு திட்டம் ஏனைய உறுப்பினர்களின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றப்பட்டது.  இன்றைய சபை அமர்வுக்கு உதவித் தவிசாளர் எம்.எம்.அன்ஸார் சமூகமளிக்கவில்லை.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது