நற்பிட்டிமுனை கல்வி சாதனையாளர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் கெளரவிப்பு


நற்பிட்டிமுனை கிராமத்தில்  கடந்த ஆண்டு (2017) கல்வித் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டும்  நிகழ்வு நேற்று   செவ்வாய்க்கிழமை (28) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றது.

நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் நடை பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவித்தார் .

நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவரும் வணிக கைத்தொழில் அமைச்சரின் இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலய பாடசாலைகளில் கல்வி கற்ற  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த 14 மாணவர்கள் பாராட்டிக் கெளரவிக்கப் பட்டனர் .

இந்த  கெளரவிப்பு நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜீ.கே.முத்துபண்டா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் , உட்பட பாராட்டுப் பெற்ற  மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பித்தனர் .













Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது