தரம் உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீலுக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் -1 க்கு உயர்வு பெற்ற  கல்முனை வலயக்  கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களைப்  பாராட்டும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை  கல்முனை அல்தாப்  ஹோட்டலில்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ .எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்றது .

மதிய விருந்துபசாரத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் .

இந்த நிகழ்வில்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Dr எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா (கல்வி முகாமைத்துவம்), எஸ்.எல்.ஏ.ரஹீம் (கல்வி அபிவிருத்தி),பீ.எம்.வை.அரபாத் மொஹிதீன் (திட்டமிடல் ),கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் உட்பட  அல் -கரீம் பவுண்டேஷன் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் ,ஊடகவியலாளரும் ,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி