அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள் வெளியிடுவதை தவிர்க்கவும்

அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டத்தை மதிக்கும் பிரஜைகளிடம் இவ்வாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபேறுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் , பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டு தேர்தல் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியே அதன் பெறுபேறுகளை வெளியிடுவார்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த பெறுபேறு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி