அரச ஊழியர் இடமாற்றத்துக்கு புதிய திட்டம்!

அரசாங்க ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதிய திட்டமொன்றை அமுல்படுத்த அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான அநுரபிரியதர்ஷன யாப்பா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் 1589/30 செயற்றிட்டத்தின்படி சகல அரசாங்க ஊழியர்களும் இடமாற்றத் திட்டத்துக்கு உட்பட்டவர்களேயாவர். அரசாங்க நிருவாக சேவை ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பில் தற்பொழுது திட்டமொன்று அமுலில் உள்ளது.
முறையான  இடமாற்றத் திட்டங்கள் இல்லாத அரசாங்க சேவைகளில் புதிய திட்டமொன்றை வகுத்துச் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி