முக்கிய கட்சிகள் இன்று தாக்கல்; 124 சுயேச்சைகள் கட்டுப்பணம்




வேட்புமனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி :


23 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் பூர்த்தியடைகிறது. ஐ. ம. சு. மு, ஐ. தே. க. ஆகிய பிரதான கட்சிகள் நேற்று சில உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.
எஞ்சிய சபைகளுக்கு இன்று தாக்கல் செய்யப்படுமென கட்சி வட்டாரங்கள் கூறின. நேற்று நண்பகல் வரை 143 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவென நேற்று புதன்கிழமை (24) மூன்று அரசியற் கட்சிகளும், மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. இதுதவிர 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம். எம். எஸ். கே. பண்டாரமாப்பா தெரிவித்தார்.
குஞ்சித் தம்பி ஏகாம்பரம் தலைமை வேட்பாளராக கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியும், காத்தமுத்து கணேஷ் தலைமை வேட்பாளராகக் கொண்ட ஈழவர் ஜனநாயக முன்னணியும், எஸ். பிரேம ராணியை தலைமை வேட்பாளராகக் கொண்ட ஜனசெத்த பெரமுனவும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
அலியார் இஸ்மாயில் பீ. மஹ்ரிப், முஸ்தபா லெவ்வை, பெளஸால், மீராமுகைதீன் முகம்மது நெளஸர் ஆகியவர்களை தலைமை வேட்பாளராகக் கொண்ட மூன்று சுயேச்சைக் குழுக்களும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி