நாவிதன்வெளி விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை வழங்க கோரிக்கை


அம்பாறை மாவட்டத்திலுள்ள சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு இதுவரை அரசினால் வழங்கப்படும் உரமானியம் வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது.

விதைப்பு வேலைகள் முடிவுற்று இரண்டு, மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், களை நாசினி விசிறிய நிலையிலும் இவ்வாறு உரமானியம் வழங்கப்படாதுள்ளதால் வேளாண்மைச் செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாமென விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் இப்பிரதேச விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்தனர். இம்முறை சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் 8500ற்கு மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

உரிய அதிகாரிகள் இப்பிரதேச விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்