ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பணிப்பாளராகவும்,
அதிஉச்சபீட உறுப்பினராகவும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 23வது பேராளர் மாநாடு வவுனியா நகர சபை
மர்ஹீம் நூர்தீன் மசூர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
மொரட்டுவ பல்கலைக்கழகம் TV Derana உடன் இணைந்து "Mora Lenz Media Awards 23" எனும் அகில இலங்கை அறிவிப்பு மற்றும் புகைப்பட போட்டியை ஏற்பாடு செய்தது. இலங்கையில் உள்ள 30ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் சார்பாக 2000ற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகள் முதல் கட்டத்தில் நுழைய கலந்து கொண்டனர். 2வது கட்டத்தில், 40 பங்கேற்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிக்கட்டத்திற்கு 10 இளங்கலை மாணவர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். University of Vocational Technology - Ratmalana பல்கலைக்கழகம் சார்பில் A.G.Mohamed Ajeeth இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி மிகவும் பெறுமதியான அகில இலங்கை- முதன்மை ஆங்கில அறிவிப்பாளர் சான்றிதழையும் பெற்றுக்கொடுத்தார்.
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் என் . எஸ் .எஸ் . அமீர் அலி நியமிக்கபட்டுள்ளார் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியதீன் அவருக்கான நியமன கடிதத்தை நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கையளித்துள்ளார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் சட்டத்தரணி வை .எல் .எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் முன்னால் அமைச்சர் அமீர் அலி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார் இவரின் தோல்விக்கு அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்க பட்டமை காரணமாக தெரிவிக்கபட்டது குறிபிடத்தக்கது
இவ்வருடம் நடை பெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பாவோதல் முதலாம் பிரிவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவி செல்வி சுஷ்மிக்கா முதலாமிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் . இவர் பாண்டிருப்பு சண்முகம் சரவண முத்து ,திருமதி காஞ்சனா சரவண முத்து ஆகியோரின் செல்வப் புதல்வியாவார்
Comments
Post a Comment