வீடு கொடுத்தோருக்கு பாராட்டு


சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கான வீடமைப்பு உதவிகளை செய்து தந்த எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை கரைவாகுவட்டை எஹெட் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.

எஹெட் வீட்டுத்திட்ட தலைவர் எம்.எஸ்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - கல்முனை கரித்தாஸ் எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான  வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர் பிரதம அதிதியாகவும் வண.பிதா.கிரைட்டன் அவுட்ஸ்கோன் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றம் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் நன்றியுடன் நினைவுச்சினனமும் வழங்கி கௌரவித்ததுடன் வீடுகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்