ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் நாளை!

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் கல்லூரிகளில் இவ்வருட ஆசிரிய பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான் இறுதி நாள் நாளை (28) என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவுறுத்தல் ஏற்கனவே கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி , சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம்,  அரபு, இஸ்லாம், இந்துசமயம், கிறிஸ்தவம், நடனம், விசேட கல்வி, தமிழ், வணிகம், உடற்கல்வி, உள்ளிட்ட 22 பாடநெறிகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடத்திற்கேற்பவும் பாடசாலைகளில் ஆசிரியர் கடமையேற்றதன் முன்னுரிமையின் அடிப்படையிலும் தெரிவுகள் மேற்கொள்ளப்படும.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்