கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டுஅமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை


பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு

கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டு
பிரதேச அபிவிருத்தி நட வடிக்கைகளின் போது கல் முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப் கல்முனை தமி ழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவதாக மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் குற்றம் சாட் டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபையில் கட ந்த காலங்களில் பதவி வகித்த மேயர் கள் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவி ருத்தி நடவடிக்கைளில் நியாய மாக நடந்துகொண்டனர்.
குறிப்பாக முன்னாள் மேயர் மசூர் மெளலானா போன்றவர்கள் மிகவும் பெருந்தன்மையோடு செயற்பட்டனர். ஆனால் தற்போதைய மேயர் சிராஸ் மீராசாஹிப் கல்முனை தமிழ் பிர தேசங்களை அபிவிருத்தி செயற்பாடு களின் போது புறக்கணித்து வருகின் றார். உதாரணமாக, கல்முனை பிரதேசத்தில் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தெரு மின் விளக்கு கள் பொருத்தப்பட்டுள்ளன.
எனினும் கல்முனைப் பிரதேசத் தில் மூன்றிலொரு பங்கினராக வசிக்கும் 2 இலட்சம் ரூபா பெறு மதியான தெரு மின் விளக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 25 ஆயிரம் ரூபா பெறுமதி யான மின் விளக்குகள் கூட தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்பட வில்லை.
முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள் ளப் படும் அபிவிருத்திகளைப் போன்று தமிழ் பிரதேசங்களுக்குரிய அபிவிருத்திப் பங்கினை வழங்க வேண்டும் என்றே கூறுகின்றேன்.
மேயர் சிராஸ் இவ்வாறு தொடர்ந்து தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவாரேயானால் மாநகர சபையில் அவருக்கு நாம் எவ்விதமான ஒத்து ழைப்புகளையும் வழங்க மாட்டோம். இவ்வாறு அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

சுயநல அரசியலுக்காக இன விரிசலுக்கு வித்திட வேண்டாம்

அமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை

பழுதடைந்த மின் குமிழ்கள் மாற்றுவதிலும் இன விகிதா சாரத்தை பேண வேண்டுமா? எங்கு இருள் சூழ்ந்து காணப்படுகின்றதோ அங்கு மின் குமிழ்கள் பொருத் தப்படும். இதில் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்? என்னைப் பல இடங்களில் புகழ்ந்து பாடிய அமிர்தலிங்கம் தற்போது ஏன் முரண்படுகின்றார் என்பதுதான் புரியாமல் இருக்கின்றது என்று கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீரா சாஹிப் தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, எனது இறுதி மூச்சு இருக் கும் வரை கல்முனை மாநகரின் அபிவிருத் திக்காகவே பாடுபடுவேன். எனது அதி காரத்தின் மூலம் எந்த இனப் பாகுபாடும் பிரதேச வேறுபாடும் அற்ற ரீதியில் அபிவி ருத்திகளை மேற்கொள்ளவே முயற்சிக்கிறேன் என்பதற்கு இப்பிரதேச தமிழ் மக்களே சான்று. இவர்களைப் போன்ற சுயநல அரசியலுக்காக எமது பிரதேச மூவின மக்களையும் பலிக்கடாவாக்கி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நான் தமிழ் மக்களுடன் கொண்டுள்ள அன்புக்கு ஆதாரம் அவர்களது பிரதேச அபிவிருத்திக்கான எனது முன்மொழிவு களாகும். கல்முனை மாநகரினை அபிவி ருத்தி செய்வதற்கு திட்டமிட்ட அடிப் படையில் நான் செயற்பட்டு வருகின்றேன்.
இதற்கு மாநகர சபை உறுப்பினர்களும் எனக்கு பக்க பலமாக இருக்கின்றது. வங்குரோத்து அரசியல்வாதிகள் என்மீது அபாண்டமான பழியினை சுமத்த முற்படுகின்றனர். இதனை கண்டு நான் பயந்து ஓடுபவன் அல்ல.
அரசியல் தெரியாமல் இந்த கதிரைக்கு நான் வரவில்லை. அரசியலுக்கு வந்து 45 நாட்களில் தேர்தலில் வெற்றியீட்டி 4 மாத காலத்துள் பாரிய முயற்சிகளை செய்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் என்மீது சேற்றை அள்ளி வீசுகின்றனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது