கல்முனை பள்ளி வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு!




அரசாங்கத்தின் கமநெகும எனும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை பள்ளி வீதியை கொங்கிறீட் பாதையாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி புனரமைக்கப்படுகிறது.

ந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.யி.ஜே.பி. நாணயக்கார மற்றும் கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எம்.அஸீஸ் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்