கல்முனை மேயர் சிராஸ், லண்டன் ரெட்பிரிட்ஜ் நகர மேயருடன் சந்திப்பு;



அகமட் எஸ்.முகைடீன்- ஊடகப் பிரிவு)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரத்தியேக விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( 23.06.2013) லண்டன் பயணமானார். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் லண்டன் கிளையின் தலைவர் எம்.எஸ்.ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று லண்டன் ரெட்பிரிட்ஜ் நகரத்தின் மேயர் பெலிசிட்டி பேங் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள், சுனாமியின் பின்னரான கல்முனை, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் சுற்றுச்சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு ரெட்பிரிட்ஜ் நகர சபையின் நடவடிக்கைகள், பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப யுக்திகள், மக்கள் தொடர்பாடல் முறை, நிர்வாக முகாமைத்துவ முறை, முறைப்பாட்டு முகாமைத்துவ முறை மற்றும் மாநகர சபைக்கான நிதியீட்டல் முறைமைகள் தொடர்பாக ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இவை எதிர்கால கல்முனை மாநகர சபை நடவடிக்கைக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் தெரிவித்தார். அத்துடன் ரெட்பிரிட்ஜ் மாநகர முதல்வர் கல்முனை மாநகர சபைக்கு வருகை தருவதற்கான அழைப்பினையும் சிராஸ் மீராசாஹிப் விடுத்தார்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று ரெட்பிரிட்ஜ் நகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இச்சந்திப்பில் தேசிய முஸ்லிம் கவுன்சில் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஜெஸீம் அப்துல் ஹமீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் லண்டன் கிளையின் உறுப்பினர்களான சியாத் ஏ. கபூர், எம்.ஜெசீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி