க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ம் திகதி ஆரம்பம்

2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி தொடக்கம் 31 ம் திகதிவரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 25 ம் திகதி இடம்பெறும் எனவும், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளுக்காக 293,117 பரிட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும், புலமைப் பரிசில் பரிட்சைக்காக 328 ,614 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த பரீட்சைகளில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்த்து இம்முறை பரீட்சையை தக்க முறையில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி