அங்கொடயில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
அங்கொட சந்தியில் இன்று (07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர் 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment