அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என செய்தியாளர்களிடம் தெரிவிப்பு


அரசியல் நோக்கமே மாநகர சபை உறுப்பினர் முபீதின் அறிக்கை என  செய்தியாளர்களிடம்   தெரிவிக்கப்பட்டது. கல்முனை மாநகர  சபை உறுப்பினர் ஏ.சி.முபீத் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள கல்முனை மாநகர அபிவிருத்தியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமைத்துவம் தடுக்கின்றது என்ற அறிக்கைக்கு  பதில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று இரவு மாநகரசபை உறுப்பினர் ஏ,எம்.பரகத் அவர்களின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் நடை பெற்றது.

இந்த சந்திப்பில் மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.ரகீப்,ஏ.எம்.பரகத் ,எம்.எல்.சாலிதீன்,ஏ.ஆர்.அமீர்,எஸ்.ஏ.பிர்தௌஸ் ,மற்றும் உமர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்

உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்  அங்கு கருது தெரிவிக்கையில் கல்முனை மாநகர  சபை உறுப்பினர் முபீத் தெரிவித்திருக்கும் கருத்து அவரது அரசியல் நோக்கத்துக்காக  சொல்லப் பட்டவையாகும் .
கல்முனைக்கு வருகை தரவிருந்த கிழக்கு மகான ஆளுநரின்  வருகை  பிற்போடப்பட்டமயானது  கல்முனை பிரதேசத்தில் இன நல்லுறவுடனான அபிவிருத்தியை ஏற்படுத்தும்  நோக்கமாகும் . கல்முனைக்கு வருகை தரவிருந்த ஆளுநர் 350 மில்லியன் ரூபாவை தரவிருந்ததாக எவரிடமும் தெரிவிக்கவில்லை அவ்வாறான நிலையில் ஆளுநர்  இந்த கருத்தை யாரிடம்,எங்கு தெரிவித்தார்  என்பதை உறுப்பினர் முபீத் தெளிவு படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்களால் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு உறுப்பினர் பரகத்,சாலிதீன் ஆகியோரினாலும் கருத்து கூறப் பட்டது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி