சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இ கணனி கல்வி மையம் திறந்து வைப்பு


தெயட்ட கிருள தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இ கணனி கல்வி மையம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.வீ.முஜீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பேற்று, தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கணனி மையத்தினை திறந்து வைத்தார்.




பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய நிலையமாக 4 மில்லியன் ரூபா செலவில் இந்நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வருகையினை நினைவு கூறும்வகையில் மரக் கன்றொன்றும் நட்டிவைக்கப்பட்டது. அத்தோடு வித்தியாலய அதிபரினால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் பி. தயாரத்ன, சிறியானி ஜெயவிக்ரம, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கல்முனை கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாநகர சபை உறுப்பினரும் கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ஏ.எம். றியாஸ் மற்றும் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது