2019 தேசிய மீலாத் விழா தர்கா நகரில் நடைபெறும்!



அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 


2019ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா களுத்துறை  மாவட்டத்தின் தர்கா நகரில் நடைபெறும் என முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று  (26.11.2018) உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

2018 தேசிய மீலாத் விழா இன்று கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளுராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

அத்துடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வீ.ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல்,  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்   அஷ்ஷேய்க்   எம்.ஆர்.எம்.மலிக், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.தார்ஸைத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட் ஸாஹிட் ஸுஹைல் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது, தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது