இலங்கையில் எய்ட்ஸ்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது

இலங்கையில் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இந்த 2010ம் ஆண்டில் முதல் மூன்று மாதத்தில் மட்டும் இந்நோயால் 6பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் எய்டஸ் நோயை உருவாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 1223பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 313பேருக்கு எய்ட்ஸ்நோய் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 212ஆண்களும் 101பெண்களும்  அடங்குகின்றனர். 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த ஆண்டில் இந்த வைரஸ் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது கடந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 3பேர் மட்டுமே இந்நோயால் இறந்தனர் இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்கு ஆகியுள்ளது 2009ம் ஆண்டு முழுமையானதுமான புள்ளிவிபரத்தின்படி 16பேரே மொத்தமாக உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது