கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்படும். சிவநேசதுரை சந்திரகாந்தன்


தற்பொழுது கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்கள் கணக்கெடுப்பு செய்யப்படுகின்றது இக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்கின்ற அடிப்படையிலும் வருகின்ற முதலமைச்சர் மாநாட்டில் இது தொடர்பான ஓர் விசேட பிரேரணை ஒன்றை தான் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்
இன்று அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் AJM இர்சாத் தலைமையில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்படி அபிவிருத்தி ஆய்வுக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் அம்பாறை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் விசேடமாக உள்ளுராட்சி மன்றங்களின் நிலவுகின்ற ஆளனி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக ஆராயப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்..

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்