கல்முனையில் சி.ஐ.டிகொள்ளையர் மூவர் கைது

சி.ஐ.டி எனக் கூறி கல்முனை தமிழ் வீடொன்றில் நகை கொள்ளையடித்த சிங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் மூவர் இன்று கல்முனை பொலிசாரினால் கைது செயப்பட்டுள்ளனர் .......... இவர்களிடம் இராணுவ அடையாள அட்டை இருந்ததாக கூறப்படுகிறது  
..(விபரம் தொடரும் ...............)

பிந்திய செய்தி 
கல்முனை வைத்திய சாலை  வீதியில்  உள்ள தமிழ் வீடொன்றுக்கு சென்ற இவர்கள்  இராணுவ அடையாள அட்டையை  காண்பித்து  வீட்டை சோதனை இடுவதாக கூறி வீட்டு அலுமாரியில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து செல்லும் போது கல்முனை வைத்திய சாலை பொலிசாரிடம் வசமாக மாட்டிக்  கொண்டனர். இவர்கள் மூவரும்  அம்பாறை,களனி,களுத்துறை பிர தேசங்களை  சேர்ந்தவர்கள். பொலிசாரின் விசாரணையை   தொடர்ந்து இவர்கள் போலி இராணுவ அடையாள அட்டை பயன் படுத்தியதாக தெரிய வந்துள்ளது  இவர்கள் இன்று கல்முனை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்  பட்டனர்.

Comments