Posts

கல்முனையில் கட்டாக்கலிகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்

Image
கல்முனை மாநகரில் கட்டாக்காலிகளை பிடிக்கும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கலிகளை பிடிப்பதற்கு செல்லும் முன்னர் மாநகர முதல்வர் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதையும் ,கட்டாக்காலி மாடுகள் அடைக்கப் படுவதையும் காணலாம்.

தெற்காசிய உதைபந்தாட்ட விழா

Image
இன்று புதுடில்லியில்  ஆரம்பம்  -  தெற்காசிய  உதைபந்தாட்ட விழா இன்று இந்தியாவின் புதுடில்லியில் ஸ்ரீ ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது. தெற்காசிய நாடுகள் அனைத்தும் பங்குகொள்ளும் இந்த உதைபந்தாட்ட விழாவில் 15 போட்டிகள் இடம்பெறஉள்ளதுடன் போட்டிகள் இம்மாதம் 11 ஆம் திகதி வரை  நடைபெற உள்ளது. இன்று தொடக்கம் இப்போட்டிகள் பி.ப. 3.00 மணிக்கும் பி.ப. 6.00 மணிக்கும் ஆரம்பமாகும். இறுதியாக 2009 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாலைதீவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான போட்டியும்  பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான போட்டியும் இன்று நடைபெறஉள்ளது. இலங்கைக்கும்  பூட்டானுக்கம் இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது. மேலும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போட்டியும் நாளை நடைபெற உள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய மைதானமான ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் சுமார் 60000 பார்வையாளர்களுக்கான ஆசன வசதிகள் காணப்படுகின்றன.

முதல் பிள்ளை

Image
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் முதலா வது மகப்பேற்று சத்திர சிகிச்சை நேற்று காலை 10.45 மணிக்கு மகப்பேற்று வைத் திய நிபுணர் யுரேக்கா சிறி விக்கிரமசிங்க மற்றும் மகப்பேற்று பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம். எம். எம். சபீர் ஆகியோரால் நடத்தப்பட்டது. 

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; மழை அதிகரிக்கும்

Image
வங்காள விரிகுடாவில் தாழமுக்கும் ஏற்பட்டதனால் இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இலங்கையின் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கத்தினால் நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். அதேவேளை இடைக்கிடை கடுங்காற்று வீசக் கூடுமெனவும் அவ்வதிகாரி கூறினார். தாழமுக்கம் காரணமாக கடலிலும் மழை பெய்வதுடன் கடுங் காற்றும் வீசுவதனால் மீனவர்கள் அவதானத்தடன் கடலுக்குச் செல்லுமாறும் அவ்வதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Image
     சொத்து பிரகடனம் செயத் தவறிய கல்முனை மாநகர சபை உறுப்பினரான  அப்துல் ரஹீம் அமீர் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்  ஆணையாளரினால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுள் இருவர் மாத்திரமே சொத்து பிரகடனம் செய்ய வில்லை .

சொத்து விபரம் வெளியிடாத உறுப்பினருக்கு நடவடிக்கை

Image
சொத்து விபரங்களை வெளியிடாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள தாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி யீட்டிய உறுப்பினர்களுக்கு தமது சொத்து விபரங்களை கையளிக்க கடந்த 25 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. குறித்த காலப்பகுதியினுள் தகவல் வழங்காத கொழும்பு மாநகர சபை ஐ.தே.க. உறுப்பினர் துஷந்த மாலகொட மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ள துரைவந்தியமேடு கிராமத்திற்கு படகுச் சேவை!

Image
அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக கல்முனை மாநகர சபை பிரிவிலுள்ள துரைவந்தியமேடு குடியேற்ற கிராமம் வெள்ளத்தில் மூழ்கி சூழப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, நகர சபை உறுப்பினர் எம்.எச்.நபார் உட்பட அதிகாரிகள் பலரும் கடற்படை அதிகாரிகளும் அங்கு சென்றனர். அங்கு சென்ற அதிகாரிகள் அம்மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சமைத்த உணவையும் வழங்கினர். கல்முனை கிட்டங்கி வீதி தாம்போதியின் மேலாக போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ளம் பாய்வதால் அக்குடியேற்ற கிராம மக்களின் போக்குவரத்திற்கென இராணுவத்தினர் இயந்திரப் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.

சாய்ந்தமருது கடலில் இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்

Image
சாய்ந்தமருது கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை பத்து மணியளவில் சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதிக்கு முன்னாள் உள்ள கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது சாய்ந்தமருது முதலாம் பிரிவைச் சேர்ந்த எம்.எம்.சிபான் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருடன் கடலில் நீராடிய மேலும் சில இளைஞர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த இளைஞரின் சடலம் சுமார் இரு மணித்தியாலங்களின் பின்னர் அதே இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முதல்வரின் களப் பரிசோதனைக்குப் பின்னர் அனுமதி பத்திரங்கள் க.மா.ந.ச

Image
கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை  உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார். கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில்  இருந்துவந்த குறைபாடுகள் களையப்பட்டு  முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது. கல்முனை மாநகரதுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வர்த்தகநிலையங்கள்,தொழில் நிலையங்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம்,சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம்   என்பன முதல்வரின் நேரடி பரிசோதனையின் பின்னர் வழங்கப் படுகின்றன.  கடந்த காலத்தில் இவ்வாறான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப் படுவதற்கு சிலர் தகாத பெறுவனவுகள் பெற்று வந்துள்ளமை கண்டு பிடிக்கப் பட்டதன் பின்னரே முதல்வர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உரிய இடத்துக்கு சென்று அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றார். இதன் அடிப்படையில் நேற்று கல்முனை மருதமுனை பகுதிகளை அமைந்துள்ள மதுபான சாலை,மரம் அரியும் ஆலைகளுக்கு சென்று அவர்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்த  நிகழ்வுகளில் கல்முனை மாநகர ஆணையாளர் லியாகத் அலி ,சூழல் சுற்றாடல

சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாடசாலை முன்பள்ளி சிரார்களின் கலை நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்

Image
சாய்ந்தமருது ஏ.ஆர்.எம்.பாடசாலை முன்பள்ளி சிரார்களின் கலை நிகழ்வும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய நூற்றாண்டு மண்டபத்தில் இடம்பெற்றது. முன்பள்ளி அதிபர் எம்.எச்.றிபாயா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும், கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி மற்றும் கல்முனை கல்வி வலய முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.சகாப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும்  கலந்து கொண்டனர். இங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அப்துல் கலாம் இலங்கை வருகிறார்!

Image
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்  இத்தகவலை வெளியிட்டார். இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம். அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார் என அமைச்சர் அங்கு தெரிவித்தார்

தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைஅபிவிருத்தி

Image
தென்னாபிரிக்க அவிபிருத்திக்கான பிரதியமைச்சர்  இப்றாஹிம் இஸ்மாயிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவுப் ஹக்கீம் தனது  இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது  தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜியொபெரியோ டொயிஜ் , கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைக்குட்டபட்ட பிரதேசங்களில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது பற்றியும்  இக்கலந்துரையாடலின் போது கருத்துப்பரிமாறப்பட்டன.

அம்பாறை மாவட்டத்துக்குபிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கி இன்று விஜயம்

Image
 அம்பாறை மாவட்டத்துக்கு  இன்று விஜயம் செய்த இலங்கைக்கான் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கினை கல்முனை மாநகர முதல்வர் அம்பாறை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவதை காணலாம் 

கல்முனை கடற்கரை பள்ளி வீதியின் அவலமோ அவலம்

Image
கல்முனையில் புனித  பிரதேசமென அரசினால் பிரகடனப் படுத்தப் பட்ட கல்முனை கடற்கரை பள்ளிக்கு செல்லும் வீதி பாழடைந்து குன்றும் குளியுமாகா நீர் தேங்கி காணப் படுகிறது.  ஒரு நாள் பெய்த  மழை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. பல அரசியல் வாதிகளை உருவாக்கிய கல்முனை பிர தேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதியின் அவல நிலையை சீர் செய்வது யார் என்ற கேள்வி மக்கள் மனங்களில் பேசப்படுகின்ற விடயமாக உள்ளது. எத்தனயோ திட்டங்களில் வீதிகள் புனரமைக்கப் படுகின்ற போது இந்த வீதி மாத்திரம் கவனிப்பாரற்று கிடப்பது கவலையாக உள்ளது என மக்கள் பலரும் பேசி கொள்கின்றனர்.

ரிஸானாவை விடுதலை செய்யுமாறு அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர்

Image
சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை சவூதி அரேபியா சென்றுள்ள ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. அங்கிருந்து நேற்று அறிவித்தார். ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு ரியாத்தில் இருந்து 520 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அல்தலாதீ மாநிலத்துக்குச்சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தது. ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டது. முதன் முதலில் இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியது. இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர் மல்கிய நிலையில் ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அல்தலாதீ மாநில நீதிமன்றத் தலைவர் ஷேக் கபீர் முஹம்மத் ரைஹான் அல் அஸாரியையும் குழுவினர் சந்தித்துப் பேசினர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்

நடிகை மனோரமா நலமுடன் இருக்கிறார்.

Image
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நடிகை மனோரமா  சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருக்கிறார். கடந்த மாதம் உடல் சோர்வு காரணமாக தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந் நிலையில்  கடந்த வாரம் அவருக்கு தலை வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மனோரமாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மனோரமாவுக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரண்டு நாள்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று சிகிச்சையளித்த  டாக்டர்கள் தெரிவித்தனர்

மாணவர்களை ஏற்றிசெல்லும் வான்களை பதிவு செய்ய வேண்டும்

Image
தவறினால் சட்ட நடவடிக்கை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் (SCHOOL VAN) அனைத்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் 2012ஆம் ஆண்டுக்குரிய பதிவை செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதியப்படாத வேன்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இம்சை ஏற்படுத்தும் விதத்தில், ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் சேவையிலீடுபடும் வேன்கள், பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் இருப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறும் பெற்றோரை, ஆசிரியர்களை, பொதுமக்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட ஆசனங்களுக்கு மேல் அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்லல் வீதிகளில் செல்லும்போது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் நிலையை வைத்திருத்தல், போன்ற விடயங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பொலிஸாரும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து பரிசீலனை செய்யும். பாடசாலை வேன்கள் 2012ஆம் ஆண்டு பதிவு செய்வத

தேசத் தலைவருக்கு மக்கள் வாழ்த்து

Image
கல்முனை நியூஸ் இனைய தளமும் வாழ்த்துகிறது  ஜனாதிபதியின் பதவியேற்பு தினம், பிறந்த நாளையிட்டு நாடெங்கிலும் விசேட வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினம் இன்றாகும். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளையாகும். இதனையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன.பயங்கரவாதத்தை ஒழித்து முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் தலைவர் என்ற வகையில் உலகத் தலைவர்களும் நாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான மாணவர்கள் ஆர்பாட்டத்தில்

Image
இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற எதுவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பியதோடு ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.

ரிஸானா நபீக் பெற்றோருடன் உணர்வுபூர்வ சந்திப்பு!

Image
குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர். 2007ஆம் ஆண்டு ஜூன் 16ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின் 23 வயதுடைய ரிஸானாவை ரியாத் சென்றுள்ள அவருடைய பெற்றோர் முதன்முதலில் சந்தித்துள்ளனர். தவாட்மி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிஸானா தனது தந்தை மொஹமட் மற்றும் தாய் ரிப்னா ஆகியோரை சந்தித்தபோது அழுது கொண்டே "என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என கெஞ்சியுள்ளார். அதன் பின்னர் மூவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டப்படி பாசப்பிணைப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். "எல்லாம் வல்ல அல்லாஹ்- எங்கள் குழந்தையை திரும்ப பெற வழி செய்ய வேண்டும்" என ரிஸானாவின் தாய் ரிப்னா இதன்போது கூறியுள்ளார். ரிஸானாவை காப்பாற்ற குழந்தையை பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். "ரிஸானா அழகாக- உடல் வலுவான மற்றும் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்" எனத் தெரிவித்துள்ள ரியாத் தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் சம

அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட இறுதிப் போட்டிநீர்கொழும்பு சென்மேரிஸ் கல்லூரி சம்பியனாகத் தெரிவானது

Image
அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதுக்குட்பட்ட மானவர்களுக்கிடையான 1ஆம் 2ஆம் 3ஆம் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று திங்கட்கிழமை கல்முனை சாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இசட்.ஏ.எச்.ரஹ்மான் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் நீர்கொழும்பு சென்மேரிஸ் கல்லூரி சம்பியனாகத் தெரிவானது. இதன் ஆரம்ப நிகழ்வில் களமுனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.