Posts

முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்கும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதைப் போல மக்களை அநாதைகளாக்குவதற்காக அல்ல.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மருதமுனையில் கடந்த சனிக்கிழமை(25-07-2015)மாலை கிளை அலுவலகத்தைத் திறந்த வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார். மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான வை.எல்.எஸ்.ஹமீட்.தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி மற்றும் வேட்பாளர்கள் கலரும் கலந்து கொண்டனர்.  இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் :-அம்பாறை மாவட்டத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகை ஏனையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் வரவில்லையென்றால்தான்  இந்த மாவட்ட மக்கள் அநாதைகளாக  ஆக்கப்பட்டிருப்பார்கள் . அம்பாறை மாவட்டத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸி

சாய்ந்தமருது மக்களை தலைவர் ஹக்கீம் மிகக்கூடுதலாக நேசிக்கின்றவர் - சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

Image
( ஹாசிப் யாஸீன்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும் கருத்தரங்கும் இன்று இரவு நடைபெற்றது. வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இங்கு வேட்பாளர் எம்ஐ.எம்.மன்சூர் ,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத் , அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் , கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ,  கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ்இ அமீர்இ பசீர் , கட்சியின் அம்பாரை மாவட்ட பொருளாளரும்இ உயர்பீட உறுப்பினருமான எஹியாகான் ,  தொழிலதிபரும் ,  சமூக சேவையாளருமான செரீப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருதைப்பற்றி பிழையான சில தகவல்களை சிலர் வெளியில் வழங்கி வருகின்றபோதிலும் சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன்தான் என்ப

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம்- கல்முனைக்குடி கடற்கரை வீதியில்

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனைக்குடி கடற்கரை வீதியில் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீதுதேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல், வேட்பாளர்களான எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சிராஸ் மீராசாஹிப், கலீலுர் ரஹ்மான் உட்பட மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கக்ழந்து கொண்டு உரையாற்றினர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழா- சாய்ந்தமருதில்

Image
சாய்ந்தமருதுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் பிரச்சாரக் கூட்டமும் நேற்;று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில்  இடம்பெற்றது. கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸனலி, மூத்த துணைத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத், வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்எச்.எம்.எம்.ஹரீஸ் , பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.நஸார்தீன், ஏ.எல்.அமீர், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.யஹியாகான், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம்.பாயிஸ், எம்.எச்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், போராளிகளும் கலந்து கொண்டனர்.  

கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடல் கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு- அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Image
நேற்று சனிக்கிழமை காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான ஏ.அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு- அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.  கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவரது பணிப்பின் பேரில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன், ரீ.கலையரசன், டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், எம்.ஜெயக்குமார், எஸ்.கமலதாசன், எம்.விஜயரட்ணம், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, உட்பட மாநகர சபை அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர். மாநகர சபையின் சபா மண்டபத்தில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகம் நேற்று மாலை அல்மனார் வீதியில்; அமைச்சர் றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகத் திறப்பு விழா  நேற்று  (25-07-2015)மாலை அல்மனார் வீதியில்; நடைபெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.  இதில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி,செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால தீவிரப் போராளியான ஏ.எம்.ஏ.கபீல் ,தலைமையில் ஆரம்பகாலப் போராளிகளான ஏ.எம்.ஹிதாயத்துள்ளா, ஏ.எம்.நஸ்றுள்ளா,எம்.பி.எம்.ஹஸன்,ஏ.ஜெமீல்,எம்.என்.பிர்தௌஸ்,என்.எம்.எம்.அனீஸ்,உள்ளீட்ட பலர் இணைந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று சாய்ந்தமருதில் அமைச்சர் றிஷாட் பதியூதீனால் திறந்து வைப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  கல்முனை தொகுதி முன்னாள் அமைப்பாளர்  ஏ.எம்.றியாஸ்  மற்றும் பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை ஆதரவாளர்கள் தோளில் சுமந்து வரவேற்றனர். அனைவரும் ஒன்றிணைந்து; செயலகத்தைத் திறந்து வைத்தனர்.இங்கு பெரும் தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து  சாய்ந்தமருது சீப்ரீஸ் விடுதியில்   விசேட செய்தியாளர் மாநாடும் இடம்  பெற்றது.

கல்முனை மாநகர சபையில் நாளை அமிர்தலிங்கத்துக்கு அஞ்சலி

Image
கல்முனை மானகரசபையின்  எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கம் இன்று காலை 25 சனிக்கிழமை காலமானார்.  2006 ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மாநகர சபைக்கு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப் பட்டு இன்று வரை எதிர்  கட்சி தலைவராக பணியாற்றி வந்தார் . அன்னாரின் சடலத்துக்கு  நாளை கல்முனை மாநகர சபையில் அஞ்சலி செலுத்தப் படவுள்ளது . கல்முனை மாநகர முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் இடம் பெறவுள்ள நிகவில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  முக்கியஸ்தர்கள் பலரும் , கல்முனை  மாநகர சபை உறுப்பினர்களும்  கலந்து கொண்டு  அன்னாருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர் .  அண்ணன் அமிர்தலிங்கத்துக்கு  கல்முனை நியூஸ்  இணையத்தளம்  அதன்  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது 

மஹிந்த ராஜபக்ஷ, நாளை சனிக்கிழமை அம்பாறைக்கு விஜயம்

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை சனிக்கிழமை (25) அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளருமான விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.     நாளை (25) பிற்பகல் 3.00 மணியளவில் அம்பாறைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.    மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா தெலுங்கு காங்கிரஸ் கட்சியினால் நினைவுச்சின்னம் வழங்கி முதலமைச்சருக்கு பாராட்டு

Image
ஸ்ரீலங்கா தெலுங்கு காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் தேஷமான்ய ஜீ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாணமுதலமைச்சரை அவரது காரியாலயத்தில் சந்தித்து அவரின் சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித்தனர். 

ஜேர்மனின் ”GIZ” பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி முதலமைச்சர் சந்திப்பு

Image
ஜேர்மனின் ”GIZ” பொருளாதார கூட்டமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (Mirs Randa kourieh) ரண்டா கொரிஹ் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கிழக்கில் அபிவிருத்தி இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு சம்மந்தமான பல விடையங்கள் பேசப்பட்டது. இச்சந்திப்பு நிகழ்வில் அமைச்சின் செயலாளர் யூ.எல்.அசீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.சலீம் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் சமந்த அபேவிக்ரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தகவல் சேகரிப்பு - 2015

Image
கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் ஒன்று கூடல் கடந்த ஜூலை 10 ம் திகதி வெள்ளிக்கிழமை கத்தார் டோஹாவிலுள்ள BCAS உயர் கல்வி நிலையத்தில் நடைபெற்றது . குறித்த ஒன்றுகூடல் மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாலும், எல்லோரையும் உள்ளடக்கியதாக நிகழ்வை ஏற்பாடு செய்ய போதிய இடவசதி அமையாத காரணத்தினாலும், அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களை இணைத்து கொள்ள முடியாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவிக்கின்றோம். இவ்வொன்றுகூடலின் போது கலந்துகொண்ட சகோதரர்களின் கூட்டு மஷூறாவின் நிமித்தம் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதன் தேவைப்பாடு உணரப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதனடிப்படையில் கத்தார் நாட்டில் பறந்து வாழும் கல்முனை சகோதரர்கள் அனைவரின் தரவுகளை பெற்றுக்கொள்ளும் செயற்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே கீழுள்ள Online Form ( தரவுப் படிவத்தினை) பூர்த்தி செய்வதன் மூலம் உங்களது தரவுகளையும் நீங்கள் பதிவு செய்துகொள்ள முடியும் . அத்துடன் இது தொடர்பாக சக கல்முனை சகோதரர்களிடமும் தெரியப்படுத்

கிழக்கு மாகாண கணித வினாடி வினாப் போட்டி ரத்து: குளறுபடிகள் காரணமாம்: பதில் போட்டி யூலை 30 இல்

Image
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கடந்த மாதம் திருகோணமலையில் நடாத்திய கிழக்கு மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் இவ்வறிவித்தலை வலயங்களுக்கு அறிவித்துள்ளார். பதில் போட்டிகள் எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, மேற்படி போட்டியில் முறைகேடுகள் குழறுபடிகள் இடம்பெற்றதாகக் கூறி ஏகப்பட்ட முறைப்பாடுகள் எமக்கு கிடைத்தன. அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுவொன்றை நியமித்தோம். அக்குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையின் படி அப்போட்டி ரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்படி அது ரத்துச் செய்யப்பட்டது. அதற்கான பதில் போட்டிகள் இம்மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறும் என்றார். இதனிடையே ரத்துச் செய்யப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இம்முடிவு தொடர்பில் தமது அதிருப்தியயை வெளியிட்டுள்ளனர். சட்

அம்பாறை வயல்களில்அரக்கொட்டி தாக்கம்! விவசாயிகள் கவலை

Image
அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட வயல் நிலங்களில் கபிலநிறத் தத்திகளின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ச.சசிகரன் ஏற்பாட்டில் விவசாயிகளை தெளிவுபடுத்தும் நடமாடும் சேவை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.ஏ.மஜீட், பாட விதான உத்தியோகத்தர் ஏ.ஜெய்னுலாப்டின் மற்றும் விவசாயப் போதனாசிரியர் வீ.நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனையும் வழங்கினார்கள்.

பொதுநலத்துடன் வாக்குகளை சில்லறைகளுக்கு வழங்காமல்- மரச்சின்னத்துக்கு வழங்கி நமது பிரதி நிதியை வென்றெடுபோம் - கிழக்கு முதல்வர்

Image
இன்று பெரும் சவாலுக்குரிய தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இத்தேர்தல் மூலம் சிறுபான்மை மக்கள் தங்களின் இருப்புக்களை சரியாகக் கணித்துக் கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அவர்கள் நியமித்திருக்கும் உறுப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஒற்றுமையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர் . அதுபோல் இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்திருக்கும் உறுப்பினர்களை நாமும் வெற்றியடைய வைக்க வேண்டும்.  அப்போதுதான் நாம் வெற்றியடைந்தவர்களாவோம். கூஜா தூக்கிகளாகவும், சுயநலவாதிகளாகவும், சுயலாபத்துக்காகவும் இன்று பலர் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள்தான் சரியான பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் ஒரு தம்புள்ள பள்ளி உடைப்புக்கும், மீண்டும் ஒரு அளுத்கமக் கலவரத்துக்கும், மீண்டுமொரு குடும்ப ஆட்சிக்கும், இந்த சிறுபான்மைச் சமூகத்தைக் அடகு வைக்கவும் நீங்கள் விரும்பினால் வெற்றிலைக்கு வாக்களியுங்கள்.   இல்லையென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து நமது பலத்தைப் பிரயோகிக்க இடமளிப்போம். அப்போதுதான் நமக்கான குரல் ஓங்கி ஒலிக்கும். என

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நிந்தவூரில் நடை பெற்றது

Image
நிந்தவூர் நிறோஸ்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று இரவு நிந்தவூரில் நடை பெற்றது. கட்சியின்  செயலாளர் நாயகமும் ,இராஜாங்க சுகாதார அமைச்சருமான  எம்.ரீ.ஹசனலி தலைமையில்  அவரது நிந்தவூர் இல்லத்தில் நடை பெற்றது . இவ்வொருங்கிணைப்பு  கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில்  போட்டியிடுகின்ற  வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ,எம்.சி.பைசால்காசீம், எம்.ஐ.எம்.மன்சூர்  உட்பட பிரதேச அமைப்பாளர்கள் ,மத்திய குழு உறுப்பினர்கள்  மற்றும் கட்சிப் போராளிகள்  என பலர் கலந்து கொண்டனர் . நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.தாஹிர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை  சிறப்பம்சமாக இருந்தது. இக்கூட்டத்தில்  தோ்தலுக்கு முன் எவ்வாறு கட்சிகளின் கூட்டங்கள் நடைபெற வேண்டும்   தலைவரின் அம்பாரை மாவட்ட பிரச்சாரங்கள் எந்த பிரதேசத்தில் அமையப் போகின்றது சிறு சிறு கூட்டங்களை கூடுதலாக ஊருக்குள்ளும் பிரதான கூட்டங்களை பிரதானமான இடங்களிலும் வைத்தும் மக்களுக்கு வேட்பாளா்களின் இலக்கங்களை தௌிவு பட