ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழா- சாய்ந்தமருதில்

சாய்ந்தமருதுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலய திறப்பு விழாவும் பிரச்சாரக் கூட்டமும் நேற்;று (26) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில்  இடம்பெற்றது.

கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹஸனலி, மூத்த துணைத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத், வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்எச்.எம்.எம்.ஹரீஸ் , பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.நஸார்தீன், ஏ.எல்.அமீர், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சீ.யஹியாகான், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம்.பாயிஸ், எம்.எச்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், போராளிகளும் கலந்து கொண்டனர்.




 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்