அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகம் நேற்று மாலை அல்மனார் வீதியில்; அமைச்சர் றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது.


(பி.எம்.எம்.ஏ.காதர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகத் திறப்பு விழா  நேற்று  (25-07-2015)மாலை அல்மனார் வீதியில்; நடைபெற்றது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். 
இதில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி,செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால தீவிரப் போராளியான ஏ.எம்.ஏ.கபீல் ,தலைமையில் ஆரம்பகாலப் போராளிகளான ஏ.எம்.ஹிதாயத்துள்ளா, ஏ.எம்.நஸ்றுள்ளா,எம்.பி.எம்.ஹஸன்,ஏ.ஜெமீல்,எம்.என்.பிர்தௌஸ்,என்.எம்.எம்.அனீஸ்,உள்ளீட்ட பலர் இணைந்து கொண்டனர்.







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்