Posts

மரத்தில் நின்றும் வெற்றிலையில் அமர்ந்தும் போட்டியிட ஸ்ரீ.மு.கா தீர்மானம்

Image
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கும் மேலும் 4 மாநகர சபைகளுக்கும் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கொழும்பு, கல்முனை, கண்டி, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய மாநகர சபைகளுக்கு தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் ஹலி தெரிவித்தார். ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினத்திற்குள் வேட்பு மனு தயாரிக்கப்பட்டுவிடும் என ஹசன் ஹலி தெரிவித்தார்.

ஸ்ரீ.மு.கா இன்று தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஸ்ரீ.மு.கா இன்று தேர்தல் தொடர்பில் தீர்மானம்

Image
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும்கட்சியுடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது. இது தொடர்பில் அரச தரப்பினருடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எமக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைகளில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் முன்னதாகவே தெரிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்டு பின்பு அரச தரப்புடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஓக்டோபர் 15 இல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!

Image
தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு உள்ளுராட்சி மன்றங்கங் 23க்கான  தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆந் திகதி நடைபெறுமென்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப  17 மாநகரசபைகள்  ஒரு நகரசபை  5 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான  வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன் வேட்பு மனுக்களை  எற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள்  எதிர் வரும் 25ஆம் திகதியூடன்  பூர்த்தி அடைகிறது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்!

Image
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமென பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 427 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழிமூலம் 2 இலட்சத்து 41 ஆயிரத்து 610 பேரும்- தமிழ்மொழி மூலம் 79 ஆயிரத்து 817 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்கென 3721 பரீட்சை நிலையங்களும் 506 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் கல்முனை மாநகர சபைக்கு ERROS இல் போட்டி

                              கட்சி  மாறிய  தமிழரசுக் கட்சியி னர்

கல்முனை மாநகர சபைத் தேர்தல்

Image
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள கட்சியின் செயலகமான தாருஸ்ஸலாமில் காலை 10.00 மணி தொடக்கம் வேட்பாளர் தெரிவு நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களையும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களையும் நேற்று சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கல்முனை மாநகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மையம் ஆகையால் வேட்பாளர்கள் தெரிவில் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதுடன் கட்சியின் வெற்றிக்காகவும் அனைவரும் பாடுபட முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட குழுவினரால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்களெனவும

தொடரும் மர்மமனித அவலம் கல்முனையில்

Image
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கராச்சில் தொழில் புரியும் தனது மாமனாரை தேடி வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொது மக்களால் மர்ம மனிதன் எனப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றது. குறித்த இளைஞர் ஒரு கடற்படை வீரர் மேலதிக பயிற்சிக்காக செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் கராச்சில் தொழில் புரியும் தனது மாமனாரிடத்தில் பெற்றுச் செல்வதற்காக வந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேச பொது மக்களால் பொலிஸ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதனால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜவாத்) உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்று நிலைமைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று கூடியிருந்த மக்களுக்கு பள்ளிவாயல் ஒலிபெருக்கி ஊடாக தெளிவுபடுத்தினர். எனினும் குறிப்பிட்ட சில இளைஞர்கள் கற்களை வீசி குழப்ப முற்பட்ட வேளை இராணுவத்தினர் துரத்தி

வீதிக்கு எவ்வளவு ??????

Image
கிழக்கு மாகான அமைச்சினால் ஜிக்கா திட்டத்தில் கல்முனைக்குடி  மாளிகை காடு வீதிக்கான  நிர்மாணப்பணி  கடந்த 15 .07 .2011 கிழக்கு மாகான அமைச்சர் உதுமாலேப்பையினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . சுமார்  மூன்றரை கிலோ மீட்டர் வீதி நிர்மாணத்துக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிதிதான் இங்கு பிரட்சினை  ரூபா  74459770 .00 மில்லியன் செலவு  காட்டப்பட்டுள்ளது சரியா என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பு

Image
”ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி” எனும் தொனிப் பொருளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாட்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் என்.எம்.சுஹைப்., அறுவைச்சிகிச்சை நிபுணர்களான ஏ.றஸீன் ஆதம்., அசோக்க பெரேரா.,  நிந்தவுர் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.மாஹிர், நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையப் பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எம்.சீ.எம்.சீ. றிலா உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதி உத்தியோகத்தர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்த கொண்டனர்.

23 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்தது

விசேட உத்தியோகத்தர்களிடம் அதிகாரம்; 23 உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படும் வரை அவைகளுக்கான அதிகாரங்கள் விசேட உத்தியோகத்தரினால் நிர்வகிக்கப்படுமென உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள 17 மாநகர சபைகள், 5 நகர சபைகள் மற்றும் பிரதேச சபை ஒன்று ஆகியவற்றின் பதவிக்காலம் செவ்வாய் நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களின் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்படி சபைகளுக்கு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜமாத்தே இஸ்லாமியின் உலருணவு உதவி

Image
இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் சாய்ந்தமருது கிளையினால் 25 வறிய குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வி இன்று சாய்ந்தமருது ஜமாத்தே இஸ்லாமியின் கிளை அலுவலகத்தில் நடை பெற்றது. அமைப்பின் சாய்ந்தமருது கிளையின் சமுக சேவை அமைப்பாளர் ஏ.எம்.பயீஸ் மற்றும் SFRP அமைப்பின் இணைப்பாளர் ஆகியோரால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

சேனைகுடிசேவோவின் மற்றுமொரு ஊக்குவிப்பு

Image
மாவட்டப் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெறும் நோக்கில் முன்பள்ளி மாணவர்களை ஊக்கப் படுத்த நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டி கண்காட்சி ஓன்று சேனை குடி இருப்பு சேவோ நிறுவனத்தில் இன்று நடை பெற்றது . இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு முன்ப ள்ளி பாடசாலைகள் தெரிவு செயபபட்டு அப்பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி நடை பெற்றது. சேனைகுடி சேவோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடை பெற்ற இக்கண்காட்சியில் கல்முனை வலயக்கல்வி அலுவலக முறை சாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சக்கப், சேனைக் குடி கணே சா மகா விய்ஹியாலய அதிபர் கே.சந்திர லிங் கம் ஆகியோர் அதிதிகளாகவும் நடுவர்கலாகவும்.கலந்து கொண்டு பார்வையிட்டனர். இக்கண்காட்சியில் தெரிவு செயப்பட்ட நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலை ,சேனை குடி விபுலானந்தா பாலர் பாடசாலை ,மத்திய முகாம் ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன .

கல்முனையில் பிள்ளையார் அதிசயம்

Image

மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று

Image
கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஒரு அணிக்கு ஏழுபேர் கொண்ட 'நொக் அவுட்' முறையிலான மர்ஹ'ம் ஏ.எல்.எம்.பழீல் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்த 15 கழகங்கள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர் மோதிக் கொண்டனர். இச்சுற்றுப் போட்டியில் இன்று நடைபெற்ற மூன்றாம் தர அணியினரை தெரிவு செய்யும் அணிகளுக்கிடையிலான போட்டியும் இம்மைதாணத்திலே இடம் பெற்றது. மருதமுனை ஆசனல் அணியினரை எதிர்த்து அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மோதி 05 - 01 என்ற ரீதியில் அக்கறைப்பற்று எம். சீ. யூத்ஸ் அணியினர் மூன்றாம் தரத்திற்கு தெரிவாகினர் இறுதியாக நடைபெற்ற வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினரை எதிர்த்து மருதமுனை சமர் அணியினர்களுக்கிடையிலான போட்டியில் வலாத்தாப்பிட்டி வீனஸ் அணியினர் 02- 01 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி சம்பியனானது. கல்முனை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கொழும்பு தல

ஊடகவியலாளர் காதருக்கு விருது

Image
,yq;if gj;jpupif ];jhgdk; kw;Wk; gj;jpupif Mrpupah; rq;fk; vd;gd ,ize;J elhj;jpa 2010k; Mz;Lf;fhd Clftpay; tpUJ toq;Fk; tpohtpy>; kUjKidiar; Nrh;e;j Clftpayhsh; gp.vk;.vk;.V. fhjh; r%f mgptpUj;jp nra;jpahsUf;fhd Rg;ukzpak; nrl;bahh; tpUjpidg;ngw;W kUjKid kz;Zf;Fk;> fpof;F khfhzj;Jf;Fk; ngUik Nrh;j;Js;shh;. fle;j 26k; jpfjp nfhOk;G nksz;l; nytd;ah N`hl;lypy; eilngw;w tpohtpd;NghNj ,th; ,e;j tpUjpidg; ngw;whh;. tPuNfrup thu ntspaPl;bd; gpujk Mrpupah; tP. Njtuh[; ,tUf;fhd tpUjpid toq;fpdhh;. 1988k; Mz;L md;id vd;w jiyg;gpyhd ftpij xd;iw vOjpajd; %yk; vOj;Jyfpw;Fs; ,th; gpuNtrpj;jhh;. fle;j 23 tUl fhykhf ,yq;ifapy; ntspahfpd;w mizj;Jj; jkpo; gj;jpupiffSf;Fk; nra;jpahsuhff; flikahw;Wfpd;whh;. ,d> kj> murpay; NtWghbd;wp mizj;Jj; jug;gpdUf;Fkhd nra;jpfis eLepiyahf epd;W vOjptUk; ,th;> fy;Kid khefug; gpuNjr kw;Wk; mk;ghiw khtl;lr; nra;jpfisAk; vOjp tUfpd;wik Fwpg;gplj;jf;fjhFk;. ,it jtpu jw;NghJ gy khtl;lq;fspYs;s gpd;jq;fpa fpuhkq;fisg;gw;wp fl;Liufs; vOjp tUtNjhL> k

முறைப்பாட்டுப் பெட்டி முன்னெடுப்பு

Image
fpof;F khfhz rigapdhy; mwpKfk; nra;ag;gl;l Kiwg;ghl;Lg; ngl;b Kiwapd; %yk; kf;fspd; gpur;rpidfSf;F jPh;TfhZk; Kiwik eilKiwapYs;sJ. ,e;j mbg;gilapy; mk;ghiw khtl;lj;jpy; fpilf;fg;ngw;w Kiwg;ghLfis tprhupf;Fk; Kfkhf ,d;W tpahof;fpoik (28.07.2010) fy;Kid tyaf;fy;tp mYtyfj;jpy; Kiwg;ghl;L tprhuizfs; rk;ke;jkhd epfo;T eilngw;wJ. fpof;Fkhfhz rigapd; jtprhsh; vr;.vk;.vk;. ghap]; jiyikapy; ,lk;ngw;w ,e;epfo;tpy;> fpof;F khfhz rig cWg;gpdh;fshd v];. G];guh[h> mg;Jy; k[Pl;> V.v];. [th`ph; ]hyp> Mupatjp fygjp> Mfpa Kiwg;ghl;Lf; FO mq;fj;jth;fs; cl;gl mk;ghiw khtl;lj;jpd; cs;Suhl;rp rigfisr; Nrh;e;j jtprhsh;fs;> gpujpj; jtprhsh;fs;> nrayhsh;fs; vdg; gyUk; fye;J nfhz;ldh;. ,e;epfo;tpd;NghJ jtprhsh; vr;.vk;.vk;. ghap]; Kiwg;ghl;Lg; ngl;b Kiwapd; Kf;fpaj;Jtk; gw;wp tpsf;fkspj;jhh;. ,q;F 03 gpujhd gpur;rpidfshd Mrpupah; ,lkhw;wk;> tpisahl;L rk;ke;jkhd gpur;rpid> fy;Kid khefu rigapy; Kiwg;ghl;Lg; ngl;b Kiw nraw;ghbd;ik Mfpa gpur;rpidfs; Muha

பேராசிரியர்எம்.இராஜேஸ்வரன் பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தினால் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு

Image
பெங்களூர் பல்கலைக் கழகத்தினால் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் எம்.இராஜேஸ்வரன் பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தினால் நேற்று (2011.07.26) பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தின் தலைவர் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அகரம் சமூக சேவை அமையத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற அதிபருமான இ.இராஜரெத்தினம், பொருளாளர் எஸ்.கஜேந்திரன், ஊடகவியலாளர் எல்.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள்

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் போதிய வசதிகளற்ற நிலையில் இயங்குவதனால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரினால் திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 25 வருடகாலம் பழமை வாய்ந்தது. இவ்வாறான கட்டிடம் இதுவரை புனர் நிர்மாணம் செய்யப்படவில்லை. இதேவேளை சுனாமி பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடற்கரை வீதியிலிருந்து முற்றாக சேதமடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன சிலகாலங்களாக நூலகக் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் அவை சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படட நிலையில், நூலகக் கட்டிடத்தை குறைந்தது அழகுபடுத்தும் முயற்சிகூட செய்யப்படாமல் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது. சாய்ந்தமருது பொது நூலகத்தில் வைத்தியசாலை இயங்கிவந்த காலப்பகுதிக்கான வாடகை சுமார் 20 இலட்சம் ரூபாவை அப்போது கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் பெற்றுக்கொடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக அபிவிருத்திக்குழுவின் தலைவர்

செப்டம்பரில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்?

Image
வியாழக்கிழமை, 28 ஜூலை 2011 17:18 இன்னும் எஞ்சியுள்ள 23 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்தும் திகதி இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் மாநாட்டில் முடிவு செய்யப்படும் என தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். எனினும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இத்தோ;தல் நடைபெறலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எம்.ரி.-977)

ஊடகவியலாளர்கள் பாராட்டு

Image
கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மருதமுனையை சேர்ந்த பி.எம். எம். ஏ. காதர், நற்பிட்டிமுனையை சேர்ந்த யூ. எம். இஸ்ஹாக் ஆகியோர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இன்று (21.07.2011) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் சமுர்த்திப் பிரிவின் தலைமைக் காரியாலய முகாமையாளர் ஏ.ஆர். எம். ஸாலிஹ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம். எம். நௌபல், ஏ. ஆர். எம். ஸாலிஹ் ஆகியோர் ஊடகவியலாளர்கள் இருவரையும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம், சான்றதழ் வழங்கி கௌரவிப்பதையும் ஏனைய சமுர்த்தி அதிகாரிகளையும் காணலாம்.

மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில்

Image
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து 75 மாணவர்கள் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்... இவர்கள் தண்ணீர் தாங்கியில் இருந்து வந்த மாசடைந்த நீரை அருந்தியதாலேயே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன... இந்தச் சம்பவம் தொடர்பாக நீர்வழங்கல் அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது...