
பெங்களூர் பல்கலைக் கழகத்தினால் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்ட கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் எம்.இராஜேஸ்வரன் பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தினால் நேற்று (2011.07.26) பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமையத்தின் தலைவர் எஸ்.துஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அகரம் சமூக சேவை
அமையத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற அதிபருமான இ.இராஜரெத்தினம், பொருளாளர் எஸ்.கஜேந்திரன், ஊடகவியலாளர் எல்.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் அங்கத்தவர்களும், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment