Posts

அரச உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைக்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்

Image
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி (பி.எம்.எம்.ஏ.காதர்) தங்கள் சேவைக்காலத்தில் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும்  இருக்கின்றது இதுதான் அரச சேவையின் நோக்கமுமாகும்.அவ்வாறு பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிமைக்காக ஏ.ஆர்.எம்.சாலிஹ் இன்று பாரட்டப்படுவதையிட்டு மனமகிழ்ச்சியடைகின்றேன் என கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார்.   மருதமுனை கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  அண்மையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு விஷேட விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேரவையின் ஸ்தாபகர் பி.எம்.எம்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சந்துருவன் அனுருத்த,சமூர்த்தி சங்கப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா ஆகியோரும்  கலந்து கொண்

கல்விச் சமூகம் போற்றும் அதிபராக திகழ்ந்து ஓய்வு பெறும் திருமதி எஸ்தர் தவராஜா

Image
பாடசாலையில் மனையியல் ஆசிரியராக பிரவேசித்து தன்னை கல்வி சமூகத்துடன்  திருமதி  எஸ்தர் தவராஜா அவர்கள் பகுதித் தலைவராக,பிரதி அதிபராக ,அதிபராக தமது இருப்பை நிலை  நிறுத்தி ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,பழைய மாணவர்கள் ,ஊர்மக்கள் போன்றோரின் மனதில்  நீங்காத இடம் பிடித்தவர். இப்பெருந்தகை  பலராலும் பாராட்டத்தக்க  வகையில் சேவையாற்றி தனது 38 வருட கல்விச் சேவையை பூர்த்தி செய்து  20.05.2017 அன்று  ஓய்வு பெறுகின்றார். இவரது வாழ்க்கை தடங்களை சற்று மீட்டிப் பார்போமாயின் வத்தலோமியுஸ்  நாகரத்தினம் தம்பதியினருக்கு  ஆறாவது புதல்வியாக 1957.05.20 இல் கோமாரியில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கோமாரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் ,உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும்  பயின்றார். 1978.10.12 அன்று ஆசிரியையாக  அம்பாறை அரசினர்  தமிழ் கலவன் பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்றார் . தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில்  மனையியல் பாடநெறியில்  பயிற்சி பெற்று 1983.12.17ஆம் திகதி கல்முனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதை

கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்களுக்கு கெளரவிக்கப்பு

Image
தரம் 05 புலமைப் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்க கல்முனை வலயக்  கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. கல்முனை வலயத்துக்குட்பட்ட  72 ஆசிரியர்கள்  கெளரவிக்கப் படவுள்ளனர் .    கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  பாடசாலைகளில்  வெட்டுப் புள்ளிக்கு மேல் ஒரு மாணவரேனும் சித்தி பெற்றிருந்தாலும் அம்மாணவருக்கு கற்பித்த ஆசிரியர்  இத்திட்ட்துக்குள் உள்  வாங்கப் பட்டு கெளரவம் பெறவுள்ளார் . குறித்த 72 ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் படவுள்ளதாக  வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்  இந்த கெளரவிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை (19)  மாலை நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடை பெறவுள்ளது .   கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கெளரவிக்கவுள்ளார் 

ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்

Image
சட்டத்துறையில் புலமைத் தேர்ச்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் கல்முனை ஆசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. "மண்ணுக்கு பெருமை சேர்த்த மகனுக்கு சொந்த மண் வழங்கும் கௌரவம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஸீஸ் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ளவிருக்கிறார்.

2018 கல்வி ஆண்டிற்கு 4கோடி 10இலட்சம் பாடசாலை பாடப்புத்தகங்கள்

Image
2018 கல்வி ஆண்டிற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். பாடப்புத்தகங்களை பிரசுரிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டிற்காக 4 கோடி 10 இலட்சம் பாடப்புத்தகங்கள் அவசியமாகின்றன. இதில் ஒரு கோடி பாடப்புத்தகங்கள் தற்சமயம் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களின் ஊடாக பூர்த்தி செய்யப்படவுள்ளன. இது அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் பிரசுரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடம் பாடசாலைகளின் 3ம், 4ம் தரங்களுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்கள் புதிதாக பிரசுரிக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் -2017.. (அறிவித்தல்)

Image
தமிழீழ  மக்கள்   கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2017), சூறிச் மாநிலத்தில்... அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே! தமிழீழ மக்கள் கல்விக் கழகம் (PEOT)  09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை எட்டு மணிக்கு (08.00)  சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல் இரண்டு மணிக்கு (14.00), அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 28வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும். சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.  ** விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ** *** உங்கள் கவனத்திற்கு:- ** போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்

முள்ளிவாய்க்கால் எங்கிருக்கிறது என்று தெரியாத பல அரசியல்வாதிகள் தங்களது எதிர்கால அரசியலக்காக முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை நடத்துவது வேதனைக்குரிய விடயம்.

Image
சந்திரநேரு சந்திரகாந்தன். இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ சர்வதேசமும் இலங்கை அரசும் அதற்கு ஒத்துக் கொள்கிறதோ எப்போது எமது போராட்டம் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறதோ எப்போ நாங்கள் ஒரு குடையின் கிழ் வேறு கட்சிகள் அமைப்புகள் இன்று எமது மக்களுக்கான உரிமையைப்பெற்றெடுகிறௌமோ அன்றுதான் எமது தமிழ் மக்களுக்கு உண்மையான மே 18 என்று வெள்ளைக் கொடிவிவகாரம் வெள்ளை முள்ளிவாய்க்காலின் முக்கிய சாட்சியாக இருக்கின்ற முன்னாள் அம்பாறை மாவட்டப்  பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துந்து கருத்துத் தெரிpத்த அவர் ஏழு கோடி உலகத் தமிழ் மக்களுக்கு மே 18 என்பது இந்த நூற்றாண்டின் மிகவூம் கொடூரமான மிகப்பெரிய இனப்படுகொலை. இந்த இனப்படுகொலை எமது உறவூகள் உரிமைக்காகப் போராடிய போது ஏகாதிபத்திய நாடுகளும் சிங்கள ஏகாபத்திய பேரினவாத அரசும் ஒருங்கிணைந்து அழித்த நாள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை நீத்தவர்கள் எதிரியிடம் சரணடையாமல் மடிந்தார்கள் எமது மாவீரர்கள

இனவாத வன்செயல்களை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

Image
(அகமட் எஸ். முகைடீன்)  பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வினவாத வன்செயல்கள் உடன் நிறுத்தப்படும் வகையில் இச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசு உடனடியாக கைதி செய்ய வேண்டும். அத்தோடு இனவாத செயற்பாட்டு பிரதானியான ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஏனைய செயற்பாட்டாளர்கள் அடங்கிப்போகின்ற நிலை ஏற்பட வழிவகுக்குமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.      முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் காட்டுமிராண்டித்தனமான இனவாத செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அண்மையில் பொலன்னறுவை ஒனேகம பிரதேசத்திற்கு சென்று இவர்களின் மற்றுமொரு இனவெறியாட்டத்தை அரங்கேற்றி இரு

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலய இடமாற்றத்தை தடுத்து நிறுத்துக! பிரதமர் ரணிலிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

Image
கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற குறித்த காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஆசிக் பதுருதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.  கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் 2011ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் நிறுவப்பட்டது. அதனூடாக கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் பெரும் நன்மை அடைந்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் சிலரது தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மேற்படி இளைஞர் காரியாலயம் அம்பாறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.  தற்காலிகமாக மாற்றப்பட்ட இளைஞர் காரியாலயத்தை அம்பாறையில் நிரந்தரமாக இயங்கச் செய்வதற்கு நடவ

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு அலுவலகத்தை மீண்டும் சாய்ந்தமருதுக்கு கொண்டுவருவது தொடர்பில் தலைவர் றவூப் ஹக்கீம் பிரதமருடன் பேச்சு - பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது பிரதமரின் அமைச்சின் கீழ் வருகின்றமையினால் குறித்த மாகாண காரியாலயத்தை மீண்டும் சாய்ந்தமருதுக்கு கொண்டுவருவது தொடர்பாக மிகுந்த அழுத்தத்துடன் கூடிய வற்புறுத்தலாக பிரதமருடன் பேசுமாறும், சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வது தொடர்பாக பேசிவருகின்ற பிரதமர் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்த ஒரு மாகாண காரியாலயத்தை அமைச்சு அதிகாரிகள் இனவாதமாக பெரும்பான்மை மக்கள் வாழும் அம்பாறை நகருக்கு மாற்றிய விடயத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமிடம் வேண்டிக் கொண்டார்.  எனவே, சீன விஜயத்தின்போது பிரதமருடன் தானும் செல்வதனால் குறித்த விடயம் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பேசுவதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதி அமைச்சரிடம் உறுதியளித்தார். அதற்கமைவாக பிரதமரிடம் சீனாவில் வைத்து அழுத்தமாக தெளிவுபடுத்தி பேசியிருப்பதாக அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தற்போது அவ

'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017'

Image
  எஸ்  .எல். அப்துல் அஸீஸ்) ' கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017' நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் மலை 4.30மணி வரை கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் கல்முனையன்ஸ் போரத்தினால்  நடாத்தப்படவுள்ளது. சமகால கல்முனையை எடைபோட்டுக் காட்டும் கல்முனையின் கல்வி, சமூக, பொருளாதார தகவல் திரட்டு - 2016 இன்  முடிவுகளை ஆய்வு செய்யும் ஆய்வரங்கமாக இது அமையவுள்ளது. இவ் ஆய்வரங்கத்தில்  'அரசியலுக்கும்  அப்பால் கல்முனையின் உரிமையும், அபிவிருத்தியும்- நடந்தது, நிகழ்வது தொடர்பான முன்னோக்கு' மற்றும்  'கல்முனையின் எதிர்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம்' ஆகிய  தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளதுடன் கல்முனைக்கான தனி நபர்  தகவல் களஞ்சிய செயலியை  ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. ஆய்வரங்கம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர்கள்  0767171951 ,  0778547627  ஆகிய இலக்கம்களுடன்  தொடர்பு கொள்ள முடியும். 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் கொண்டாடப்பட்ட தமிழ்,சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!

Image
தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய அலுவலகத்தினால் தமிழ்,சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வானது கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்முனை வலயத்தின் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு மதப்பெரியார்கழளும் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  கல்முனை வலயத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் நான்கு மதங்களையும் உடைய மதப்பெரியார்களினது ஆசியுரையுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின. அந்த வகையில் மலர்மாலை அணிவித்து சமய கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.  அங்கு வருகைதந்த மாணவர்களை 3 வலயங்களாக பிரித்து அவர்களுக்கான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றதுடன் நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இனப்பிரச்சினை விடயத்தில் முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்!

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இனப்பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகளையும் - பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்த அறிக்கையிலேயே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் வடக்கும் கிழக்கும் இணைவது இயற்கையானது என்றும், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்குவதற்கு எதிராக தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த கருத்தை வன்மையாகக்  கண்டித்து நான் அண்மையில் காத்தான்குடியில் பேசியிருந்தேன். இதன் போது, வடகிழக்கு இனப்பிரச்சினை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என நான் கோரிக்கை விடுத்த

பிரதமர் மோடியின் இலங்கை வருகை; கொழும்பில் விசேட போக்குவரத்து

Image
சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தொடர்பில், கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது.   அதற்கமைய நாளை மறுதினம் (11) பிற்பகல் 6.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையததிற்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.   அவரது பாதுகாப்பு கருதி, எதிர்வரும் மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.   குறித்த காலப் பகுதியில் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன, மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்!

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு  இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்தார்.   பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக கையொப்பமிட்ட இராஜாங்க  அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-  முஸ்லிம்களின் புனித பூமியான பாலஸ்தீனத்தில் அத்துமீறி குடியேற்றங்களை நிறுவி வருகின்ற இஸ்ரேல், ஏராளமான பாலஸ்தீனியர்களை சிறைப்படுத்தி வைத்துள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்ற அவர்கள் தற்போது உண்ணாவிர போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.  56 பெண்கள், 28 ஊடகவியலாளர்கள், 100 நோயாளர்கள், 300 சிறுவர்கள், 13 நீதித்துறை கவுன்சில் உறுப்பினர்கள

அவதூறுகளால் கிழக்கு முதல்வரின் சேவைகளை நிறுத்த எண்ணுவது பகற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச் எம் லாஹிர் முழக்கம்

Image
அவதூறுகளலாளும் ஆதாரமற்ற போலிக்குற்றச்சாட்டுக்களாலும் முதலமைச்சரின் சேவைகளை நிறுத்தி விடலாம் என எண்ணுவது சிறுபிள்ளைத் தனமான எண்ணமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எச் எம் லாஹிர் தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருக்கும் காலப் பகுதிகளில் மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்யாது கட்சியை சிதைத்து விட்டு இன்று  மக்களுக்கு சேவை  செய்பவர்களினால் தமது எதிர்ப்பு  அரசியல் சூனியமாகிவிடும் என்ற அச்சத்தினால் சில கத்துக்குட்டி அரசியல்வாதிகள் முதலமைச்சர் குறித்து விமர்சனங்களை  முன்வைக்க முனைவதாகவும் சட்டத்தரணி லாஹிர் தெரிவித்தார், மூதூரில்   ​இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து  கொண்டு  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் முதலமைச்சர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர்  இவ்வாறு கூறினார்.   அங்கு  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது இதற்கு முன்னர் போலியான குற்றச்சாட்டுக்

இந்த நாட்டின் ஜனாதிபதி கிழக்கு முதலமைச்சரா?????-மாகாண சபை உறுப்பினர் வீரசிங்கவுக்கு குழப்பம்

Image
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவா இல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ டி வீரசிங்க  கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த விஹாரைகளை கட்டுவதற்கு அனுமதியளித்துள்ள நிலையில் பௌத்தசாசன அமைச்சரும்  அதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகையில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் மாணிக்க மடுவில் விஹாரைக்கட்டக் கூடாது எனவும் அதனை தடுக்க எவ்வாறு முற்படுவார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ டீ வீரசிங்க கேள்வியெழுப்பினார். நேற்று இரவு (08.05.2017 ) அம்பாறையில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ டீ வீரங்க இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க, மாணிக்கமடு விவகாரம்   தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு  அதனை நிறைவேற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தலைமையில் குழுவொன்றை அமைத்துள்ளார்கள் ,அந்தக் குழுவினரே  மாணிக்கமடுவில் விகாரை அமைப்பதா  இல்லை

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் க.பொ.த.உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கு 210 மாணவர்கள் தகுதி

Image
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில்  9  மாணவர்கள்  9  பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று  கல்லூரி வரலாற்றில் சாதனை படைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலைகளுள் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளது. ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியியைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.அல்பான் அஸ்பாக் ,ஐ.எல்.எம்.இன்ஸாப் ஹிஸ்னி  ,ஏ.ஆர்.எம்.றுசைட் , ரீ.முஹம்மட் ,எம்.எம்.எம்.சபீஹான்  ,எம்.ஏ.எம்.கைசான்  ,பீ.எம்.ஸஹ்ரி அபா  ,ஜே.யுஸ்ரி மபாத், ஏ.ஜி.எம்.இக்லாஸ் ஆகிய 9 மாணர்களும் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் எம்.இஸட்.ஐ.ஏ.ஏ.சுஜாயிர் இப்றாஹிம்,  எப்.எம்.ஜாஹின் அப்ஸார்,  ஏ.எஸ்.ஏ.தஹ்லான்  , எம்.ஏ.எம்.அஸ்ஜத் றஸீஸ்  ,எம்.கே.அஸ்னம் சனாப் , எம்.எஸ்.அக்தர் பர்விஸ்  ,ஏ.ஜே.ஏ.ஸஹ்மி  ,எம்.ஆர்.மரீர் அஹமட் , எம்.ஜே.ஏ.அப்னான்  , ஜே.எம்.எம்.ஹன்ஸால் ஆகிய 10 மாணவர்களும் 8 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் எம்.பீ.எஸ்.ஆகில் அஹமட் ,ஏ.எஸ்.பியாஸ் முஹமட் , எப்.எஸ்.வஸீப் ,  எம்.எஸ்.எம்.சதீம் ,  எப்.பயாஸ் முஹமட்  ,

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு 'நினைவின் நிழலில்' நிகழ்வு இன்று கல்முனையில் நடைபெற்றது.

Image
உலகறிந்த கவிஞர் ''சண்முகம் சிவலிங்கம்'' அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக   ''நினைவின் நிழலில்'' நிகழ்வு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை   (07.04.2017)  நடைபெற்றது. எழுத்தாளரும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஆலோசகருமான உமாவரதராஜன் தலைமையில் கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை கிளனி மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தொடர்பாக பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களின்  ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு அரங்கு ஆய்வு கூடம் வழங்கிய  'அப்பா ' கவி நாடகம் மேடையேற்றப்பட்டதுடன், நினைவு சிறப்புரையை கவிஞரும் விரிவுரையாளருமான சோ .பத்மநாதன் வழங்கினார்.  அத்துடன் ர .ஜோயல் குழுவினரால் கவிஞரின் சில  கவிதைகள் உள்ளடங்கிய ஒளித் தொகுப்பான 'வரிகளும் வடிவமும் ' திரையிடப்பட்டது.  கல்முனை தமிழ் சங்கத் தலைவர் பரதன் கந்தசாமி அவர்கள் வரவேற்புரையும்,  கல்முனைநெற் ஊடக குழுவின் இயக்குனர் கோ.பிரசாந்  நன்றியுரையையும், நிகழ்ச்சி தொகுப்பை   க. டினீஸ்கரனும்  வழங்கினர்.  இன்றைய நிகழ்வில்  பேராசிரியர் மௌனகுரு அவர்களுக்கும்

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் சாய்ந்தமருது வறிய மக்களுக்கு குடிநீர் திட்டம்

Image
கல்முனை மாநகர முன்னாள் மேயர் டாக்டர் சிறாஸ் மீராசாஹிபின் வேண்டுகோளுக்கு இணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு குடி நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதியை முன்னாள் மேயர் சிறாஸ் மீராசாஹிபிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தார்.  சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழ்கின்ற வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டமொன்றை கல்முனை மாநகர முன்னாள் மேயர் மேற்கொண்டு வருகின்றார்.  இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இத்திட்டத்துக்கு ஹிரா பௌண்டேஷன் முதற்கட்டமாக ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ததுடன், தொடர்ந்தும் உதவிகளை செய்வதாக உறுதியளித்தது.

மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

Image
(யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர்) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டமானது சாய்ந்தமருது பிரதேசத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டு தற்போது 95 மாணவர்களுக்கு மேல் மார்க்கக் கல்வி பயின்று வரும் மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) தலைமையில் (06) ஆம் திகதி சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கிழக்குமாகாண தலைமை மக்தப் மேற்பார்வையாளர் அஷ்செய்க் ஆர்.எல்.நிழாமுத்தீன் (நூரி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) தலைமையிலும், பெற்றோர்களின் சார்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் எம்.ஐ.நௌபரின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக அஷ்செய்க் ஏ.வி.பர்ஹான் (தப்லீகி) அம்பாறை 3 ஆம் பிரிவு மக்தப் மேற்பார்வையாளர் அவர்களும் கலந்து கொண்டார். மாணவர்களது பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய அதேவேளை நிகழ்வுக்கு தலைமை வகித