கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் கொண்டாடப்பட்ட தமிழ்,சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!

தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் கல்முனை கல்வி வலய அலுவலகத்தினால் தமிழ்,சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வானது கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்முனை வலயத்தின் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு மதப்பெரியார்கழளும் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

கல்முனை வலயத்தில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் நான்கு மதங்களையும் உடைய மதப்பெரியார்களினது ஆசியுரையுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகின. அந்த வகையில் மலர்மாலை அணிவித்து சமய கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர். 

அங்கு வருகைதந்த மாணவர்களை 3 வலயங்களாக பிரித்து அவர்களுக்கான நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றதுடன் நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது