'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017'

 எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017' நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் மலை 4.30மணி வரை கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் கல்முனையன்ஸ் போரத்தினால்  நடாத்தப்படவுள்ளது.

சமகால கல்முனையை எடைபோட்டுக் காட்டும் கல்முனையின் கல்வி, சமூக, பொருளாதார தகவல் திரட்டு - 2016 இன்  முடிவுகளை ஆய்வு செய்யும் ஆய்வரங்கமாக இது அமையவுள்ளது.

இவ் ஆய்வரங்கத்தில்  'அரசியலுக்கும்  அப்பால் கல்முனையின் உரிமையும், அபிவிருத்தியும்- நடந்தது, நிகழ்வது தொடர்பான முன்னோக்கு' மற்றும்  'கல்முனையின் எதிர்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம்' ஆகிய  தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளதுடன் கல்முனைக்கான தனி நபர்  தகவல் களஞ்சிய செயலியை  ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

ஆய்வரங்கம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர்கள் 07671719510778547627 ஆகிய இலக்கம்களுடன்  தொடர்பு கொள்ள முடியும். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது