Posts

கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார்

Image
  ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் கல்முனை மாநகர முதல்வர் எங்களையூம் எங்கள் பிரதேசத்தையூம் புறக்கணித்து செயல்படுகின்றார். எங்களின் பிரதேசம் சுகாதார சீர் கேட்டில் முன்னிலை வகிக்கிறது. எங்களின் அவல நிலையை பல தடவைகளில் கல்முனை மாநகர முதல்வருக்கு கூறியிருக்கின்றோம் . கல்முனை பௌத்த விகாரை பகுதியில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் கல்முனை மாநகர சபைக்கு வரி எதுவூம் செலுத்தக் கூடாதென கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்தின தேரர் கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் இடம் பெற்ற பொலிஸ் நடமாடும் சேவையில் உரையாற்றும் போது தெரிவித்தார். கல்முனை பொலிஸார் ஏற்பாடு செய்த மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் பொலிஸ் நடமாடும் சேவையூம் சனிக்கிழமை கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் நடை பெற்றது. கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் இ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார்இ நாவிதன் வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.மதன் உட்பட சமயப் பெரியார்கள்இ சிவில் பாதுகாப்பு

ஸ்ரீ சத்திய சாயி ஆராதனை மகோற்சவ விழா

Image
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதி அடைந்து 03 வருடத்தை நினைவு கூரும்  வகையில்  ஸ்ரீ சத்திய சாயி ஆராதனை மகோற்சவ விழா  கல்முனை சத்திய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(26) காலை இடம்  பெற்றது . ஸ்ரீ சத்திய சாயி பாவா சமாதியடைந்த 2011.04.24 அன்றய தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் கடந்த 24ஆந்  திகதி தொடக்கம் கல்முனை சாயி நிலையத்தில் இரண்டு தினங்கள்  பூசை வழிபாடுகள் இடம் பெற்று இன்று (26) காலை 7.30 மணிக்கு விசேட பூசையுடன்  உலக சாயி சாந்தி ஊர்வலமும் இடம் பெற்றது . கல்முனை சத்திய சாயி சேவா நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் கல்முனை -03  ஊடாக தரவை பிள்ளை ஆலயம் வரை சென்று மீண்டும் கல்முனை நகர் ஊடாக பொலிஸ்  வீதி வழியாக வர்த்தக வங்கி சந்தியை சென்றடைந்து மீண்டும்  சத்திய சாயி சேவா நிலையத்தில் மகாமங்கள ஆராதியுடன் நிறைவு பெற்றது . உலக சாயி சாந்தி ஊர்வலத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அடியார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் . ஊர்வலத்தில் அனைத்து மதங்களினையும் பிரதிபலிக்கும் வகையில் சாயி பஜனையும் இடம் பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்திக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரின் பங்களிப்பு

Image
கல்முனை மாநகர சபை  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஏ.எச்.ஏ.நபாரின்  பெரு  முயற்சியால்  அம்பாறையில் இருந்து கொண்டுவரப்பட்ட கனரக  இயந்திர உதவியுடன்  சாய்ந்தமருது நகரில்  பழுதடைந்து ஒளிராத நிலையில் காணப்பட்ட நவீன சோடியம் மின் விளக்குகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையினால் இத்திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் பயனாக  சாய்ந்தமருது நகரின் பிரதான நுழைவாயில் தொடக்கம் பொலி வோரியன் சந்தி வரையான பகுதியில் அமைந்துள்ள  ஒளிராத சோடியம் மின் விளக்குகள் மீண்டும் ஒளிர்வு கொடுக்கின்றன. கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெற்ற இத்திருத்தப்பணி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எச்.எம்.நபார்,  ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். தனது நிறுவனத்திற்கு சொந்தமான நவீன வாகனத்தை எமக்கு இலவசமாகத் தருவதற்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே முன்வந்திருந்தார் என ம

கல்முனை சட்டத்தரணிகளுக்கென சட்ட நூலகத்துடன் கூடிய மாடிக் கட்டடம்

Image
 - மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முயற்சி - "கல்முனைப் பிராந்திய சட்டத்தரணிகளின் நலன் கருதி, சட்ட நூலகம், ஒன்றுகூடல் மண்டபம், ஆலோசனைக் கூடம், தனியான சிற்றுண்டிச்சாலை போன்ற வசதிகளுடன் கூடிய மாடிக் கட்டடமொன்றை இந்த வருடம் நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்துள்ளேன்" - இவ்வாறு, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தகவல் வெளியிட்டார். கல்முனையைச் சேர்ந்த பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும், முன்னாள் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருமான சட்டத்தரணி எம்.கே.பேரின்பராசா அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கங்கத்தின் உபதலைவராக (கிழக்கு வலயம்) தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் நடத்தியது. கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்துர் ரஸாக் தலைமையில், சாய்ந்தமருது சீபிறிஸ் மண்டபத்தில் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்துகொண்டார். அவர் மேலும் கூறியவை வருமாறு:- "நமது சட்டத்தரணிகளுக்கான இத்தகைய வசதிகளுடன் கூடிய கட்டடமொன்றை கல்முனை

கல்முனை மாநகர சபை கணக்காளராக றசீட் நியமனம்

Image
கல்முனை மாநகர சபைக்கு கணக்காளராக சாய்ந்தமருதை சேர்ந்த எச்.எம்.றசீட் நியமிக்கப் பட்டுள்ளதாக  நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. கல்முனை வலயக்கல்வி அலுவலகம்,கணக்காய்வு திணைக்களம்,பொலிஸ்  திணைக்களம் என்பவற்றில் நீண்ட காலம் சேவையாற்றிய இவர் தற்போது கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப் பட்டுள்ளார். மே 02ஆந்  திகதி மாநகர சபையில் கடமைகளை பொறுப்பேற்பார் எனவும்  தற்போது பதில் கடமை புரியும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முழு நேரக் கடமை புரிவார் எனவும் அறிய முடிகின்றது . இந்த நியமனம் இன்று கிழக்கு மாகாண  சபையில்  வழங்கப்பட்டுள்ளது. 

இம்போர்ட் மிரருக்கு கல்முனை நியூஸ் இணையத்தின் வாழ்த்துக்கள்

Image
இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் இலங்கிவந்த இம்போர்ட்மிர்ர் நெற்வேர்க்  புது ப்பொலிவுடன் புதுயுகம் படைக்க தயாராக தனது முன்னெடுப்புக்களை மேற்கொண்டு செல்கின்றது. இம்போட்மிர்ர் மீடியா நெட்வேர்க்கின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் நேற்று இடம்பெற்றது. மேற்படி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது “ஒலியமுதம்” நூல் வெளியீடும் அதிகள் மற்றும் இம்போட் மிரரின் சிரேஸ்ட அறிவிப்பாளர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் யாவும் இம்போட்மிர்ர் மீடியா நெட்வேர்க்கின் பணிப்பாளர் எஸ்.எல். முனாஸ் அவர்களின் தலைமையில் இடம்பற்றது குறிப்பித்

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் ஜய வருட கலாச்சார விளையாட்டு விழா

Image
ஜய வருடப் பிறப்பை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் அனைத்து தர உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்தும் கலாச்சார விளையாட்டு விழா  (26) சனிக்கிழமை மாலை நடை பெறவூள்ளது. வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்திய சாலை மைதானத்தில் நடை பெறவூள்ள இந்த புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வூகளில் கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவூம், கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் கௌரவ அதிதியாகவூம் கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்தலால் விசேட அதிதியாகவூம் கலந்து சிறப்பிக்கவூள்ளனர். இன்றய தினம் காலை நிகழ்வூகளாக மரதன் ஓட்டம் ,கபடி, கிளித்தட்டு போன்ற போட்டிகள் இடம் பெற்று மாலை நிகழ்வூகளாக தலையணைச் சமர்,தேங்காய் துருவூதல்,மாவிற்குள் காசு எடுத்தல், சோடா போத்தலுக்கு வளயம் எறிதல்,யானைக்கு கண் வைத்தல்,போத்தலில் தண்ணீர் நிரப்புதல்,சமனிலை ஓட்டம்,கிடுகு இழைத்தல்,தொப்பி மாற்றுதல்,பலூன் உடைத்தல் ,மிட்டாய் பொறுக்குதல், பணிஸ் சாப்பிடுதல், ஊசி நூல் கோர்த்தல், விநோத

கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Image
கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  (23) இடம்பெற்றது. கல்முனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்இ சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்இ பிரதிப் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள் உட்பட அரச உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் பல முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அத்துடன் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படவூள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதியூம் இங்கு வழங்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை தொகுதி அபிவிருத்திக்கு 161 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.

சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் ஒருபோதும் இல்லாத நிலைக்கு குறைந்துள்ளது

Image
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் வெகுவாக நீர்மட்டம் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்ட விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் ஒருபோதும் இல்லாத நிலைக்கு குறைந்துள்ளது . சேனநாயக்க சமுத்திரத்தின் படங்களே இவை 

10 நாட்களில் 94 பேர் உயிரிழப்பு!

Image
பண்டிகை காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்துக்கள் காரணமாக கடந்த 10 நாட்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் அனர்த்தங்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தல் போன்ற விடயங்களே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றின் காரணமாக 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதுதவிர, சுமார் 243 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் ஆயிரத்து 631 வாகன செலுத்துனர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலை இழுத்துச் சென்ற மாணவியை போராடிக் காப்பாற்றிய சகோதரிகள்!

Image
குளிக்க சென்ற மாணவியை  முதலை கடித்து  படுகாயம்  முதலை பிடியில் இருந்து மீட்கப் பட்ட மாணவி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி கண்டி வைத்திய சாலைக்கு இடமாற்றம்  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட நெயனாகாடு பிரதேசத்தில் இந்த சமபவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது நேற்று முன்தினம் மாலை சம்மாந்துறை மலையடி கிராமத்தை சேர்ந்த   சம்மாந்துறை பிரதேசத்தில்  கலைப் பிரிவில் கல்வி கற்கும்  மாணவி  குளிப்பதற்கு தனது இரு சகோதரிகளுடனும் மற்றும் உறவினர்களுடனும் நெய்னா காடு ஆற்றுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த வேளை  பாரிய முதலை ஒன்று  குறித்த மாணவியின் கால் பகுதியில் கடித்து  இழுத்து செல்வதை சகோதரிகள் இருவரும்  கண்டு கூக்குரல் இட்டவாறு அரை மணித்தியாலம்  அந்த சகோதரிகள் இருவரும் முதலையுடன் போராடி சகோதரியை மீட்டுள்ளனர்.  காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளதால் மாணவிக்கு இரத்தப் பெருக்கு  ஏற்பட்டு  மயங்கிய நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் சிரமத்துக்கும் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளனர். வைத்திய சாலையில் அனுமதிக

புனித ஹஜ் யாத்திரைக்கு இம்முறையும் கட்டுப்பாடுகள்: 2240 பேருக்கே அனுமதி

Image
* 7500 பேர் விண்ணப்பம்: தகுதியானோருக்கு விசாக்கள் * முதல் தடவையாக செல்லவுள்ளோருக்கு முன்னுரிமை * மக்கா, மதீனா விஸ்தரிப்பு பணிகள் முடியும் வரை கட்டுப்பாடு புனித ஹஜ் கடமை யை நிறைவேற்றுவத ற்காக இம்முறை இலங்கையிலிருந்து 2240 பேருக்கே அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்தது. ஆனால் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக 7500 க்கு மேற்பட்ட வர்கள் விண்ணப்பித்திருப் பதாக தெரிவித்த திணைக்கள பணிப்பாளர் எம். எச். எம். ஸமீல் இதில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். புனித மக்காவை அண்மித்த பிரதேசங்களில் விஸ்தரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதால் ஹஜ் யாத்திரிகர்களின் தொகை கடந்த சில வருடங்களாக மட்டுப்படுத்த ப்பட்டு வருகிறது. கடந்த வருடமும் 2240 பேருக்கே கோட்டா வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே 7500 பேர் விண்ணப்பித்துள்ளதால் அதில் முன்னுரிமை அடிப்படையில் தகுதியானவர்களை தெரிவு செய்வதாக கூறினார். முதற் தடவையாக ஹஜ் கடமைக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறிய பணிப்பாளர், இது தொடர்பான கடிதங்களை தெரிவு செய்யப்பட்

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வூம், பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகள், உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வூம்

Image
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வூம், பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகள், உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வூம் நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது. கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.எல். அலாவூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்ட நிதி உதவியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட புதிய அன்பியூலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினையே இன்று அமைச்சர் மன்சூர் பொத்துவில் மாவட்ட வைத்திய சாலை இ சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கு வழங்கி வைத்தார். அத்துடன்  பிரதேசத்திலுள்ள  பல வைத்திய சாலைகளுக்கு 85 இலட்சம் பெறுமதியான மருந்துகள், உபகரணங்கள் என்பனவூம் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாத

நீலாவணைகடற்கரையை அண்மித்த பகுதியில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

Image
  கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாவணை விஷ்ணு கோவில் வீதியில் கடற்கரையை அண்மித்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (14) இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீரமுனை அரசடி வீதியைச் சேர்ந்த சிவநேசத்துரை ராமச்சந்திரன் (வயது 50) எனும் 06 பிள்ளைகளின் தந்தையுடைய சடலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் மனைவி முருகன் சித்தரா தகவல் தருகையில்; “எனது கணவர் மருதமுனையைச் சேர்ந்த மாகாண அமைச்சின் செயலாளரிடம் கூலி வேலை செய்பவர். அவரிடம் சம்பளம் பெற்று என்னிடம் தருவார். அடிக்கடி மதுபானம் பாவிப்பது அவரது வழக்கமாக இருந்து வந்தது” என்று தெரிவித்தார். இறந்தவரின் சடலம் தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது  இவரது மரணம் தொடர்பில் கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கட்டிடத் திறப்பு விழா

Image
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத் தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் கட்டிடத் திறப்பு விழா நேற்று  இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய வங்கிக் கட்டிடத்தினைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், கல்முனை பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் அல்-ஹாஜ்.ஏ.சீ.ஏ.நஜீம், கல்முனை மகாசங்க சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்..எஸ்.நயீமா, சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சதீஸ் சிறப்பு அதிதிகளாகவும், விசேட அதிதிகளாக கல்முனை பொலிஸ்

ஓ/எல் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பாராட்டு

Image
கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவியும்  ஊடகவியலாளர் யு.முகம்மட்  இஸ்ஹாக் உடைய மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரண பரீட்ச்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார். அவரது வீடு தேடி சென்று  இன்று 14.04.2014  பார்ஹானாவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார் .மாணவியின் பெற்றோர்களான ஊடகவியலாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக் ,ஜென்னதுல்  ஜுமீரா  உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வரும் காணப் படுகிறார் .  

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Image
பிறந்திருக்கும் ஜய வருடத்தில் கல்முனை நியூஸ் இணையத்தளம் தனது வாசகர்களுக்கு தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்கள்நியமனங்கள்.

Image
  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல்   பிரிவு  ,  கல்வியமைச்சு  ,  கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றின்   புரண ஒத்துழைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய சுற்றாடல் முன்னோடி   நிகழ்ச்சியின் முக்கியமானதோர் அங்கமாக கருதப்படும் ஆசிரியர்களின் உச்ச   பயனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கல்வி நிருவாகத்தின் கீழ்வரும் மாவட்ட  ,  வலய மற்றும் கோட்ட மட்டத்தில் சுற்றோடல் முன்னோடி ஆணையாளர்கள்   நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை ( 12 )  அம்பாறை நகரிலுள்ள   மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதான காரியாலயத்தில் கிழக்கு மாகாண   சுற்றாடல் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.ஸி.நஜீப் தலைமையில்   இடம்பெற்ற து.   இந்  நிகழ்வில்   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.நிஸாம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை  வழங்கி வைத்தார். அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக எம்.ரீ.நௌபல் அலி அவர்களும்  ,  கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக ஜனாபா மஸுரா அவர்களும்   சாய்ந்தமருது கோட்ட சுற்

தமிழ் சிங்கள புது வருட புத்தாண்டு விளையாட்டு விழா

Image
தமிழ் சிங்கள புது வருடத்தைக் கொண்டாடும் வகையில் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த புத்தாண்டு விளையாட்டு விழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு தினங்கள் நடை பெறவூள்ள புத்தாண்டு விழாவின் முதல் நாளான இன்று 13.04.2014 கல்முனையிலிருந்து மட்டக்களப்பு வரையான சைக்கிள் ஓட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாண்டிருப்பு விழையாட்டுக் கழகத்தின் தலைவர் லயன்.ஸ்ரீ ரங்கன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனஇ அம்பாறை திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.அன்வர்டீன் இ கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தனர். நாளைய தினம் (14) காலையில் மரதன் ஓட்டப் போட்டியூம்இ மாலையில் மைதான நிகழ்ச்சிகளும் பாண்டிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெறவூள்ளது.