கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் தினங்களில் ஆழ்கடல் பகுதியில் காலநிலை சீரற்றதாக காணப்படும் என்பதினால் கடற்றொழிலாளர்கள் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் பெரும்பாலான இடங்களில் கடும் மழைபெய்யக்கூடிய காலநிலை காணப்படுகின்றது. எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இந்த நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்ககூடும். இது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்ககூடும். இதற்கமைவாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்தல் மற்றும் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை மலையக பிரதேசங்களில் விசேடமாக மண்சரிவு இடம்பெறக்கூடிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். மலைப்பிரதேசப்பகுதிகளில் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகி