கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. 
திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர்களை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவகலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி