Posts

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடுவர் போட்டிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை றிலாஸ் சித்தி

Image
இலங்கை கிரிக்கட்  கட்டுப்பாட்டு  சபையினால்  நடாத்தப் பட்ட கிரிக்கட் நடுவர்களுக்காகன  போட்டிப் பரீட்சையில்  (UMPIRE) நற்பிட்டிமுனையை  சேர்ந்த றிலாஸ் முகம்மட் சித்தியடைந்துள்ளார் . விளையாட்டு துறையில் ஆர்வங் கொண்ட இவர்  தான் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . மேலும் பல திறமைகள் பெற்று சாதனைகள் பல புரிய கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது 

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு பிரியாவிடை கெளரவிப்பு

Image
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில்  கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக சத்திர சிகிச்சை நிபுணராக  பணியாற்றி பல சத்திர சிகிச்சைகளை  வெற்றிகரமாக  செய்து முடித்து  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு  இடமாற்றம் பெற்றுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர்  மற்றும்  வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்களால் பிரியாவிடை  வைபவம்  சம்மாந்துறை  அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நடாத்தப் பட்டது. சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் அவர்களுக்கு வைத்திய  அத்தியட்சகர் பொன்னாடை போர்த்தி  கெளரவித்தார் . வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் . 80க்கும்  மேற்பட்ட  வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர்  மற்றும்  வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்  ஏ.டபிள்யு.எம்.சமீம்  நினைவு சின்னம் வழங்கி வைத்தார் . 

விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஹரீஸ் நியமனம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதால் பிரதி அமைச்சர் ஹரீஸ் விளையாட்டுத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாகச் செய்யும் ஆற்றலையும் திறமையையும் கொண்டவர் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சார்

Image
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி  (பி.எம்.எம்.ஏ.காதர்)  மருதமுனை மண்ணின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலே கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற எம்.சி.அன்சார் அவர்களின் சேவை இந்த மாகாணத்திலே பிரதிபலிப்பதென்பது மருதமுனை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும். மருதமுனை மண் பலதரப்பட்ட அறிவியலாளர்களை உருவாக்கியிருக்கின்றது இதில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.அந்த வகையில் இந்த இப்போது கிடைத்திருக்கின்ற இந்தப் பதவியின் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சேவை வழங்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது  என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தெரிவித்தார். மருதமுனை கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற மருதமுனைச் சேர்ந்த எம்.சி.அன்சாருக்கான வரவேற்பும், கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை மாலை(12-02-2017)பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது  இதில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உ

கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரி சங்க வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஒன்று கூடலும் கெளரவிப்பு விழாவும் நாளை திங்கட் கிழமை இரவு  வலயக் கல்வி அலுவலக திறந்த வெளியரங்கில் நடை பெறவுள்ளது. வலயக்  கல்விப்  பணிப்பாளரும் நலன்புரி சங்க  போசகருமான எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர்  எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கல்முனை வலயக்  கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்ஸரின் வழிகாட்டலுடன்  இடம் பெறும்  நிகழ்வில்  கலை  கலாச்சார நிகழ்வுகளும் மின்னொளி  விருந்தோம்பலும் நடை பெறவுள்ளது . நிகழ்வில்  ஓய்வு பெற்ற  04 உத்தியோகத்தர்களான   முகாமைத்துவ உதவியாளர்களான திருமதி அலிபா ,  லத்தீப்  ஆகியோரும்  தொழில் நுட்ப மேற்பார்வை அதிகாரி அஸீஸ் ,அலுவலக  உதவியாளர் நாகேஸ்வரன்  ஆகியோரும்  இடமாற்றம் பெற்று சென்ற  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  முக்தார்,கணக்காளர் சாலிதீன் ஆகியோரும்  அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவமலர் , அலுவலக உதவியாளர் நிமலன்  ஆகிய 04 உத்தியோகத்தர்களும்  பாராட்டி கெளரவித்து  நினைவுப் பரிசுகளும் வழங்கி

கல்முனையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக   சுதந்திர தின விழா    கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் .அப்துல் ஜலீல் தலைமையில் 69வது சுதந்திர தின விழா நடை பெற்றது . கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை   சுதந்திர தின விழா  இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிழ்வுகள் இன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடை பெற்றது  வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ஏ.றஹ்மான் தலைமையில்.ந்டை பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .இதே வேளை இவ்வைத்தியசாலையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு   கல்முனை மக்கள் வங்கி கிளையால் வங்கிக்கணக்கு புத்தகங்கள் வழ்ங்கி வைக்கப்பாட்டதுடன் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் மக்கள்  வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் ஏ.அஸீஸ் உட்பட   ஊழியர்களும் கலந்து கொண்டனர்  கல்முனை பிரதேச செயலக  சுதந்திர தின விழா  69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்படட நிகழ்வுகள் இன்று (04) கல்முனை பிரதேச செயலக வளாக

இன்று அதிகாலை சாய்ந்தமருதில் இடம் பெற்ற வாகன விபத்தில்

Image
சாய்ந்தமருது பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு  நோக்கி வந்த கல்முனை டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதி காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள்

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (30) திங்கட்கிழமை நடைபெற்றது.  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக்,  பிரதேச செயலாளர் எம்.எச். கனி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கல்முனை கரையோர பிரதேசத்தில் காணப்படும் சுனாமியால் பாதிப்புக்குள்ளான கட்டட இடிபாடுகளை அகற்றி அப்பிரதேசத்தை அழகுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.   நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர்   றவூப் ஹக்கீமினால் கல்முனை மாநகர பிரதேசத்தின் திறந்தவெளி கரையோரத்தை அழகுபடுத்துவதற்கான வரைபடத்தை அமைப்பதற்கான பணிப்புரை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி கரையோர பிரதேசத்தை அழகுபடுத்தும் வ

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சாய்ந்தமருது கல்வி மேன்பாட்டுக்கான கல்விச் செயலனிக் குழு உருவாக்கம்.

Image
சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கிராம அபிவிருத்திச் சங்க பிரிதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் உரையாற்றுகையில், கடந்தவருடம் ஓகஸ்ட் மாதமளவில் நிதிகள் கிடைக்கப் பெற்றமையினால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வருடத்திற்காக நிதி ஒதுக்கீடுகள் வருட ஆரம்பத்தில் கிடைக்கப் பெற்றுள்ளமைய

நற்பிட்டிமுனை காபட் வீதி கைவிடப் பட்டுள்ளது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அசமந்தம்

Image
ஆள் பாதி  ஆடை பாதி என்று சொல்வது போல் நற்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது .  கிராமத்தின்  அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு  முக்கால் பகுதிக்கு  காபட்  வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல்  வீதி வரை  உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று  கிடக்கிறது.  கல்முனை மக்கள் வங்கி  முன்பாகவிருந்து  கல்முனை  பொலிஸின் முன்பாக நட்பிட்டிமுனை வரை செல்லும்  2 கி.மீ வீதி  30 மில்லியன்   ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட இரண்டாங்கட்ட வேலைகள்  நடை பெற்று  அதுவும் அரை குறையுடன்  காணப்படுகிறது

அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்

Image
அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று (2017.01.21) கல்முனையில் நடை பெற்றது. தமிழர் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றான  ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவு  செலுத்தும் வகையில் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என்பதை வலியுத்தியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது. தமிழர் கலாச்சார பண்பாடுகள் தடை செய்யப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்ற  இச்சூழ் நிலையில் தமிழ்நாட்டு வாழ் உறவுகளின் போராட்டத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் கல்முனை வாழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு  திரட்டும் வகையில் இந்த  அமைதிப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் கல்முனை நகரில் இடம் பெற்றது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக ஒன்று சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து அமைதிப் பேரணியாக கல்முனை நகரை சென்றடைந்து அங்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல

நற்பிட்டிமுனையில் பாரிய அபிவிருத்தி - சமுர்த்தி நடமாடும் வங்கி சேவை திறந்து வைப்பு

Image
நற்பிட்டிமுனையி கிராமத்தில் சமுர்த்தி நடமாடும்  வாங்கி சேவை கட்டிடம் இன்று திறந்து வைக்கப் பட்டது . விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  ஆகியோர்   இக்கட்டிடத்தை  திறந்து வைத்தனர்  திறந்து வைக்கப் பட்ட  இக் கட்டிடம்  கடந்த 2012.05.27 ஆம்  திகதி  ஆயுர்வேத வைத்தியசாலையாக  அப்போது கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சராக இருந்த எம்.எஸ்.சுபையிரினால்  திறந்து வைக்கப் பட்டது. 

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற தைப் பொங்கல் விழா

Image
உழவர் திருநாளான தைப் பொங்கல் விழா அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. அம்பாறை,மட்டக்களப்பு  பிராந்திய லயன்ஸ் கழகங்களும் காரைதீவு  இந்து சமய விருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பொங்கல் விழா காரைதீவு  கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகளுடன் இடம் பெற்றன. காரைதீவு  முச்சந்தியில் அமைந்துள்ள விபுலானந்த அடிகளார் சதுக்கத்திலிருந்து ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலத்தில் உழவர்களை கௌரவப் படுத்தும் வகையில் அவர்களால் பயன் படுத்தப்படும் விவசாய உபகரணங்களுடன் பெருந் திரளான இந்துக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் லயன்ஸ் கழக ஆளுனர் உட்பட கழகங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். விபுலானந்த சதுக்கத்தில் இருந்து  ஆரம்பமான பொங்கல் விழா ஊர்வலம் ஆலயத்தை சென்றடைந்து நந்திக் கொடி ஏற்றலுடன் கலாச்சார விழுமியங்களுடன் ஆலய முன்றலில் பொங்கல் விழா இடம் பெற்றன. இவ்விழாவில் காரைதீவு  மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்