Posts

மூன்று மாகாண சபைகளுக்கு நாளை தேர்தல்: 108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி

Image
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப் பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறு கிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 (3073) வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்கள

தேர்தல் நடைபெறும் மாகாணங்களின் சகல பாடசாலைகளும் நாளை மூடப்படும்!

Image
கிழக்கு ,சப்ரகமுவ ,வடமத்திய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலையொட்டி  இம்மூன்று மாகாண சபைகளிலுள்ள சகல பாடசாலைகளுக்கும்  நாளைய தினம்  (07ம் திகதி) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செப்.8ம் திகதி சனிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.அதனை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களாக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதால்  நாளைய தினம்   வெள்ளிக்கிழமை இப்பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டு மென்று தேர்தல் ஆணையாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  கல்வியமைச்சு இவ் வறிவித்தலை விடுத்துள்ளது.  கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை விடுக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி; கிழக்கு மாகாணத்தின் இறுதி பிரசாரத்தில் பங்கேற்ப்பு!

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று அக்கரைப்பற்று பொது மைதானத்தில் உள்ளுராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, நிமால் சிறிபால டி சில்வா, பி.தயரத்ன, றோஹித அபேகுணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சட்டத்தரணி சிறியாணி, சரத் வீரசேகர உட்பட வேட்பாளர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஜமாலியா சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மதத் தலைவர்கள் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பொலிசாருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு

Image
கல்முனையில் சம்பவம்  கிழக்குமாகான சபை வேட்பாளர் ஜெமீலை ஆதரித்து இன்று கல்முனையில் தேர்தல் பிரசார ஊர்வலம் நடை பெற்றது .ஊர்வலத்தை தடுத்து நிறுத்த கல்முனை பொலிசார் முற்பட்டபோது கட்சி ஆதரவாளர்களுக்கு ம் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றி போலீசார் கட்சி ஆதரவாளர்களை அடித்து கலைத்தனர் .இந்த சம்பவத்தை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை சற்று குழப்ப நிலை காணப் பட்டது .

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

Image
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக் கான தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்காதவர்கள் தமது சேவை நிலையம் அமைந்திருக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று மாகாண சபைக ளுக்குமான தபால்மூல வாக்க ளிப்பு கடந்த 27 ஆம், 28 ஆம் திகதிக ளில் நடைபெற்றன. இத்தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்காதவர்கள் மீண்டும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் தெரிவித்தார். தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் தமது சேவை நிலையம் அமைந்திருக்கும் மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று அங்கு வாக்களிக்க முடியும். எதிர்வரும் 6 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இவர்கள் இங்கு தமது வாக்குகளை அளிக்க முடியும் என அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்து வாக்களிக்க முடியாது போனவர்கள் இக்காலப் பகுதிக்குள் வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் தபால் மூலம் வாக்க

ஹரீசுக்கு கொலை அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்குமாறு அக்கரைப்பற்று பொலிசுக்கு முன் சத்தியாக்கிரகம்!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீசை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். இன்று மாலை 3 .00 மணியளவில் வேட்பாளர் தவத்தின் வீட்டில் மதிய விருந்து உபாசாரத்தில் கலந்து விட்டு வரும் போதே அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கபபடுகின்றது. இத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் மயிரிழையில் உயிர் தப்பியதொடு அவரது வாகனத்திட்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் அமைச்சர் அதாஉல்லாவின் நெறுங்கிய குண்டர்களாலேயே மேற் கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார். இச்சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரிஸ், எம்.ரி.ஹசனலி ஆகியோரும் வேட்பாளர்களான ஏ.எல்.தவம், நசார் ஹாஜி, ஜப்பார் அலி, ஏ.எல்.எம்.நசிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவித் தவிசாள

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்)

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி இடும் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்) செய்து கொண்டனர். மேற்படி நிகழ்வூ சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் வியாழன் இரவூ ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூ+ப் ஹக்கீம் தலைமையில் கட்சி சார்பான உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 17 பேர் சத்திய பிரமானத்தை வாசித்து தலைவர் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் உள்ள உலமாக்கள் சாட்சியாக தங்களின் ஒப்பங்களை இட்டு கையளித்துள்ளனர்.  இந்த சத்தியபிரமானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.  அல்லாஹ்வின் பேரருளால் எதிர்வரும் 08ம் திகதி நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அல்லாஹ்வின் அருளும் மக்களின் செல்வாக்கும் நிறைவாகப் பெற்றுஇத் தேர்தலில் வெற்றி பெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன். இத்தேர்தலில் வெற்றிபெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெள

வானில் இன்று நீல நிலா!

Image
 நோன்மதி தினமான இன்று  இரவு வானில்  தோன்றும் பூரண நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் முறையும்- இன்று  வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது நிலா நீலமாகத் தோற்றமளிக்குமாம். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள் புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும்   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீல நிலா 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி- இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.

3மாகாணங்களிலும் சகல பாடசாலைகளும் 7ம் திகதி மூடப்படும்!

Image
கிழக்கு ,சப்ரகமுவ ,வடமத்திய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு முதல் நாள் (07ம் திகதி) வெள்ளிக்கிழமை இம்மூன்று மாகாண சபைகளிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செப். 8ம் திகதி சனிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. ஆகவே அத்தினத்திற்கு முதல் நாளான 7ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்று தேர்தல் ஆணையாள ர் கேட்டுக்கொண்டதற்கிணங்க  கல்வியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. கல்வியமைச்சு கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை நேற்று அவசரமாக அனுப்பியுள்ளது. சகல அதிபர்களுக்கும் இதனை தெரியப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் கல்முனையில் தபால் வாக்களிப்பு

Image
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தபால் மூல  வாக்களிப்பு அம்பாறையின்  கல்முனை பிரதேசத்தில் இன்றும் இடம் பெற்றது   கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலக தபால் மூல வாக்காளர்கள்  மாநகர ஆணையாளர் லியாகத் அலி மற்றும் பிரதேச செயலாளர் நவ்பல் முன்னிலையில் வாக்களித்தனர் 

அமைச்சர் றிசாத் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதி!

Image
மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜூட்சனை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் ஒன்று தொடர்பிர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமறு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நீதிச் சேவை ஆணைக்குழவினால் நியமிக்கப்பட்ட மேலதி நீரதவான் ரங்க திசாநாயக்க விடுத்த அழைப்பாணையினை ஏற்றுக் கொண்டு இன்று அமைச்சர் மன்னார் மஜிஸ்திரேட் நீதமன்றில் ஆஜரானார். கடந்த 17 ஆம்,18 ஆம் திகதிகளில் அமைச்சர் நீதவானுக்கு தொலைபேசியில் தீர்பொன்று குறித்து அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் மஜிஸ்திரேட் நீதவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார். இதனையடுத்து அமைச்சரை கைது செய்யுமாறு கோரி நாடு தழுவிய முறையில் நீதிமன்ற பகிஷ்கரிப்பை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர றிசாத் பதியுதீன் இன்று சிரேஷ்ட சட்டதரணிகள் சகிதம் மன்றில் ஆஜரானார். சிரேஷ்ட சட்டதரணிகளான அனுர மெத்தேகொட,எம்.எம்.சுகைர்,எம்.சஹீட்,கஸ்ஸாலி ஹூசைன்,,ஹூனைஸ் பாருக்,எஸ்.எல்.ஏ.அஸீஸ்,திருமதி.ஆபிய்யா,எஸ்.பாஹிம்,அஹமட் முனாஸ்,ரோஷன்,ஏ.எம்.றபீக்,சிராஸ் நுார்தின்,ஏ.லதீப்,உட்பட 20 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிக

அம்பாறை தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி...

Image
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  கல்முனை கிறீன்பீல்ட் வீடமைப்புத் திட்ட வளாகத்தில்   இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். 

மாணவர்களுக்கு ஆசிர்வாதம்

Image
இன்று  நடை பெற்ற ஐந்தாம் தர புலமை பரிசு பரீட்சைக்கு தோற்றிய கல்முனை கர்மேல் தேசிய பாடசாலை மாணவர்களை கல்லூரி பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஆசிர்வதிப்பத்தையும் பரீட்சை எழுத மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதையும் காணலாம்