Posts

Showing posts from May, 2017

சிறுவர்கள் உள்ளிட்ட 146 பேரை பலி கொண்டது அனர்த்தம் (UPDATE)

Image
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும்சீரற்ற காலநிலை காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை,  சிறுவர்கள் உள்ளிட்ட 146 ஆக அதிகரித்துள்ளதோடு, 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.   15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு   நாட்டின் 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவ்வனர்த்தம் காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களை எதிநோக்கியுள்ளன.     களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்கள் அதிக உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது.   நாளை மழை தொடரும் வாய்ப்பு   தற்போது மழை குறைவடைந்துள்ள போதிலும், தென் மேற்கு பருவப் பெயர்ச்சி காற்று காரணமாக, நாளைய தினம் (29)

இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4,93,455 ஆக அதிகரிப்பு

Image
சீரற்ற காலநிலையின் காரணமாக இதுவரை இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93ஆயிரத்து 455ஆக அதிகரித்;துள்ளது.   185 நலன்புரி முகாம்கள் இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிடடார்.   இது வரையில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 113 என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.   தோற்றுநோய் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட வைத்தியக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் நலன்புரி முகாம்களில் இதற்கான Nவுலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.   இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார். 

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

Image
2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நாளை  நடைபெறவிருந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய அசாதாரண காலநிலையின் காரணமாக 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 111 தரத்திற்கு சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 93,952 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையில் தோற்றவுள்ளனர். இப்பரீட்சையானது மீண்டும் இடம்பெறும் தினம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளதுடன், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சை திணைக்களத்தின் நிர்வன மற்றும் வெளிநாட்டு பரீட்சை கிளையினை தொடர்பு கொள்ள முடியும். தொலைப்பேசி இலக்கங்கள் : 011 278

ஏழு மாவட்டங்களில் இயற்கை அனர்த்தம் : வெள்ள நிலைமை மேலும் மோசமடையும்

Image
ஏழு மாவட்டங்களில் அனர்த்த நிலை நிலவுகின்றது. இன்று மழை குறைவடைந்திருந்த போதிலும் இரவுவேளையில் கடும் மழை பெய்தால் களனி கங்கையை அடுத்துள்ள கொழும்பு மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் 2016ம் ஆண்டில் ஏற்பட்டதிலும் பார்க்க பெரும் வெள்ளநிலமை ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. களனி கங்கை , ஜின் கங்கை , நில்வள கங்கை , களுகங்கை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய அனர்த்த நிலை குறித்து பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டு;க்கொண்டுள்ளது. 16ஆயிரத்து 759 குடும்பங்களை சேர்ந்த 61 ஆயிரத்து 315 பேர் , 7 மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனத்தத்தின் காரணமாக பாதிக்கபட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கை அனர்த்தத்தின் காரணமாக இதுவரையில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காணாமல் போயுள்ளனர். 11 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர். இரத்தினபுரி மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை கம்பஹா மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பிடங்களை இழந்துள்ளோரின் எண்ணிக்கை 53ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்பொழு

அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்

Image
பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க தகவல் திணைக்களம் 24 மணித்தியாலங்களும் இயங்கும் தகவல் நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, மீட்புப் பணிகளிலும் ஈடபட்டு வருகிறார்கள். தற்சமயம் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையில் இருந்து மக்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். நிவாரண பொருட்களை பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அலுவலகங்களில் கையளிக்கலாம்.

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களின் தந்தை காலமானார்

Image
அல்ஹாஜ் எம்.ஐ ஹபீப் முஹம்மட்(பெரியதம்பி முதலாளி)அவர்கள் இன்று காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அன்னார் மர்ஹூம்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீரா உம்மாவின் மகனும், உம்மு சல்மாவின் அன்புக் கணவரும் மர்ஹூம் பத்தும்மா,முஹம்மட் காசீம்,முஹம்மட் யாஸீன் ஆகியோரின் சகோதரனும் ஆவார். மர்ஹூம் இஸ்ஸடீன்,ரஹீம்,அமீர் அலி,ஹரிஸ்(விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்),பாயிஸா,பாயிதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார். பொறியியலாளர் ஏ.சீ.எம்.அன்சார்(அவுஸ்திரேலியா),டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான்(வைத்திய அத்தியட்சகர்-அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை)ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை அதாவது சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை நூராணியா தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அனர்த்த பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம்

Image
வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம் என்று அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இது மற்றுமொரு அனர்த்த நிலைமையாகும் என்பதினாலும் நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக்கூடும் என்பதன் காரணமாக அரசாங்கம் அனர்த்த பகுதிகளை பார்வையிட செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரி மாணவன் அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி மாலைதீவுக்குப் பயணமானார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்;) மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரியைச் சேர்ந்த ஷரீஆத்துறை மாணவன் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி வியாழக்கிழமை(25-05-2017)மாலைதீவுக்குப் பயணமானார். இவர் மாலைதீவில் கிறாவறு என்ற தீவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித றமழான் மாதம் முழுவதும் தறாவிஹ் தொழுகை நடாத்தவுள்ளார்.இவர் போட்டி அடிப்படையில் தெரிவு  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.குணராசா கல்முனை பிரதேச செயலகத்தால் வரவேற்கப்பட்டார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) சிரேஷ்ட ஊடகவியலாளரும்,  தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசாவு க்கு செவ்வாய்க்கிழமை(23-05-2017)கல்முனை பிரதேச செயலகத்தால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.குணராசாவுக்கு மருதமுனையில் வரவேற்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) சிரேஷ்ட ஊடகவியலாளரும்,  தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசாவுக்கு செவ்வாய்க்கிழமை மருதமுனையில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.மருதமுனையின் பிரபல வர்த்தகரும்,  சமூகசேவையாளருமான பறகத் டெக்ஸ் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் பரீட் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.தினகரன் பத்திரிகையின் அம்பாறை மாவட்ட வாசகர் சுற்றுலாவின் போதே இவருக்கு இந்த வரவேற்பளிக்கப்பட்டது.இதன் போது வாகர்களுக்கு தினகரன் பத்திரிகை இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை மண்ணுக்கு மகிமை வழங்கிய தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா

Image
தினகரன் பத்திரிகை அம்பாரை மாவட்டத்தின் வரலாறுகள் அடங்கிய பொன்னிலம் பத்திரிகையை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு வீதி உலா நேற்று அம்பாறை மாவட்டம் பூராக நடை பெற்றது . தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா தலைமையில் வீதி உலா எனது நற்பிட்டிமுனை மண்ணை தொட்ட போது சமூக சேவையாளர் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அபிவிருத்தி அமைப்பி ன் தலைவர் சி.எம்.ஹலீம் அவர்களின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் அவர்களின் தலைமையில் மகத்தான வரவேற்பு வழங்கப் பட்டது .  வீதி இரு மருங்கிலும் மாணவர்கள் புடை சூழ "தினகரனை வாசிப்போம்" "தினகரனை வாழவைப்போம் " " அண்ணன் குணாவை போற்றுவோம் " என்று மாணவர்கள் ,ஆசிரியர்கள் கோஷத்துடன் வந்தவர்களை வரவேற்று மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி, தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசாவிடம் இருந்து தினகரன் பத்திரிகை அம்பாரை மாவட்டத்தின் வரலாறுகள் அடங்கிய பொன்னிலம் பிரதிகளை ஒவ்வொருத்தரும் பெற்றுக் கொண்டனர் . இந்த நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்

தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) சிரேஷ்ட ஊடகவியலாளரும்தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசா அம்பாறை மாவட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்த விஷேட ஒன்றுகூடல் திங்கள்கிழமை(22-05-2017)மாலை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு ஊடகவியலாளர்கள் சார்பில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ்.இஸ்ஸதீன்,   எம்.ஏ.பகுறுதீன் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்களுக்கு கெளரவிப்பு

Image
தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கல்முனை  வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில்  நேற்று நடை பெற்றது. கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்கள்  இங்கு கெளரவிக்கப் பட்டனர் .  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெட்டுப் புள்ளிக்கு மேல் ஒரு மாணவரேனும் சித்தி பெற்றிருந்தாலும் அம்மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் இத்திட்ட்துக்கு ள் உள் வாங்கப் பட்டு கெளரவம் பெறவுள்ளார் என கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளரின் அறிவித்தலுக்கமைய  .  72 ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் பட்ட  நிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடை பெற்றது  இந்த கெளரவிப்பு விழா  நேற்று  வெள்ளிக்கிழமை (19) மாலை நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது  .  வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 72 ஆசிரியர்களையும் கெளரவித்தார். கல்முனை வலயக்  கல்வி அலுவலக பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான எம்.எஸ்.எஸ்.எம்.உமர் மௌல

கல்முனையன்ஸ் போரத்தின் " விழித்தெழு " ஆய்வரங்கம்

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனையன்ஸ் போரத்தின் சமகால கல்முனையை எடை போட்டுக் காட்டும்  கல்வி,சமூக பொருளாதார தகவல் திரட்டு 2016 இனது முடிவுகளை ஆய்வு செய்யும் " விழித்தெழு " ஆய்வரங்கம்  இன்று வெற்றிகரமாக நடந்தேறியது. ஆய்வரங்க நிகழ்வு இன்று காலை கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நடை பெற்றது .கல்முனையன்ஸ் போரத்தின் உறுப்பினர் றிஸாட் ஷரீப் தலைமையில் நடை பெற்ற ஆய்வரங்கு நிகழ்வில் ஹமீட்  எஸ்.லெப்பை வரவேற்புரை நிகழ்த்தினார் . நிகழ்வில் கல்முனைக்கான தனி நபர் கல்வி களஞ்சிய செயலி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது . அதனை தொடர்ந்து தகவல் திரட்டு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு  குழுக் கலந்துரையாடலும் இடம் பெற்றது. குழுக்கலந்துரையாடலில் கல்வி அரங்கு,சுகாதார அரங்கு,சமூக கலாச்சார அரங்கு ,பொது வசதிகள் அரங்கு ,பொருளாதார அரங்கு என ஐந்து வகையாக விரிவாக ஆராயப்பட்டு கலந்து கொண்ட  அரசியல் பிரமுகர்கள் ,கல்விமான்கள் ,புத்திஜீவிகள்,வைத்தியர்கள்  முன்னால்  சமர்ப்பணம் செய்யப்பட்டது . அரசியலுக்கு அப்பால் கல்முனையின் உரிமையும் ,அபிவிருத்தியும்  நடந்தது ,நிகழ