கல்முனையன்ஸ் போரத்தின் " விழித்தெழு " ஆய்வரங்கம்

யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனையன்ஸ் போரத்தின் சமகால கல்முனையை எடை போட்டுக் காட்டும்  கல்வி,சமூக பொருளாதார தகவல் திரட்டு 2016 இனது முடிவுகளை ஆய்வு செய்யும் " விழித்தெழு " ஆய்வரங்கம்  இன்று வெற்றிகரமாக நடந்தேறியது.

ஆய்வரங்க நிகழ்வு இன்று காலை கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நடை பெற்றது .கல்முனையன்ஸ் போரத்தின் உறுப்பினர் றிஸாட் ஷரீப் தலைமையில் நடை பெற்ற ஆய்வரங்கு நிகழ்வில் ஹமீட்  எஸ்.லெப்பை வரவேற்புரை நிகழ்த்தினார் .

நிகழ்வில் கல்முனைக்கான தனி நபர் கல்வி களஞ்சிய செயலி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது . அதனை தொடர்ந்து தகவல் திரட்டு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு  குழுக் கலந்துரையாடலும் இடம் பெற்றது.
குழுக்கலந்துரையாடலில் கல்வி அரங்கு,சுகாதார அரங்கு,சமூக கலாச்சார அரங்கு ,பொது வசதிகள் அரங்கு ,பொருளாதார அரங்கு என ஐந்து வகையாக விரிவாக ஆராயப்பட்டு கலந்து கொண்ட  அரசியல் பிரமுகர்கள் ,கல்விமான்கள் ,புத்திஜீவிகள்,வைத்தியர்கள்  முன்னால்  சமர்ப்பணம் செய்யப்பட்டது .

அரசியலுக்கு அப்பால் கல்முனையின் உரிமையும் ,அபிவிருத்தியும்  நடந்தது ,நிகழ்வது முன்னோக்கு என்ற தலைப்பில் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ்  கருத்துரை வழங்கினார் . அதே போன்று கல்முனையின் எதிர்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம் என்ற தலைப்பில் தேசிய சமுதாய நீர் வழங்கல் திணைக்களத்தின்  முன்னாள் பணிப்பாளர் நாயகம்  பொறியியலாளர் எம்.ஐ.ஏ.லத்தீப் கருத்துரை வழங்கினார் . அதே போன்று பொறியியலாளர் ஏ.ஜெ.எச்.ஏ.ஜெளசியினால் தன்னிறைவடைந்த கல்முனை என்ற தலைப்பில் சமர்ப்பண காணொளி காண்பிக்கப் பட்டது.

குழுக்களின் கலந்துரையாடலின் முடிவு கலந்து கொண்டோர் முன்னிலையில் சமர்ப்பணம் செய்யப்பட்டு சபயோரின் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஆய்வரங்கின் முடிவில் கல்முனைப் பிரகடனமும் வாசிக்கப் பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட்து .  















Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது