கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்களுக்கு கெளரவிப்பு


தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கல்முனை  வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில்  நேற்று நடை பெற்றது. கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்கள்  இங்கு கெளரவிக்கப் பட்டனர் . 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெட்டுப் புள்ளிக்கு மேல் ஒரு மாணவரேனும் சித்தி பெற்றிருந்தாலும் அம்மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் இத்திட்ட்துக்குள் உள் வாங்கப் பட்டு கெளரவம் பெறவுள்ளார் என கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளரின் அறிவித்தலுக்கமைய  .  72 ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் பட்ட  நிகழ்வு  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நடை பெற்றது 
இந்த கெளரவிப்பு விழா  நேற்று  வெள்ளிக்கிழமை (19) மாலை நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது  .  வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 72 ஆசிரியர்களையும் கெளரவித்தார்.

கல்முனை வலயக்  கல்வி அலுவலக பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான எம்.எஸ்.எஸ்.எம்.உமர் மௌலானா,எஸ்.எல்.ஏ.றகீம் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் , கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  உட்பட அதிபர்கள் ,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்  என பலர் கலந்து கொண்டனர் 








Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது