Posts

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்பு

Image
இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் இராஜினாமா

Image
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நேற்று வரை ஒன்பது அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.  தேர்தல் பெறுபேறுகள் வெளியான நேற்று முன்தினம் (17) ஏழு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். அதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் (18) பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்கவும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருப்பதாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.  இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவரும் வீடமைப்பு அபிவிருத்தி, நிர்மாணப்பணிகள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச, விளையாட்டுத் தொலைதொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நிதியமைச்சர் மங்கள சமரவீர, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா, அபிவிருத்தி மூலோபாய சர்வதேச சந்தைப்படுத்தல் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு

Image
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். அதனடிப்படையில் மீண்டும் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதியிடமே ஒப்படைத்தாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு - நேரடி ஔிபரப்பு

Image
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. (பின்னிணைப்பு - 10.59 am)  புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திலேயே தனது கடமைகளை சற்று முன்னர் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பி. பீ. ஜயசுந்தர நியமிக்கபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா

Image
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விற்றர் கணக்கிலேயே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். Harin Fernando ‏ Verified account   @fernandoharin   3h 3 hours ago More Respecting the people's mandate I am stepping down as Minister of Sports, Telecommunications & Foreign Employment. I am also resigning from my positions at UNP. I Take this opportunity to thank every one who supported me in my tenure, hope good work done will be continued

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாஸ வாழ்த்து

Image
ஐ.தே.க. உப பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு, புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் தனது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் ஆணைக்கு கட்டுப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாகவும், சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தன்னை ஜனாதிபதி பதவியில் நியமிக்க ஆதரவளித்தோர், தனக்காக முன்னின்றோர் உள்ளிட்ட அனைவருடனும் தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து எதிர்வரும் வாரங்களில், கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது 26 வருட அரசியல் வாழ்க்கை மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்

இதுவரை வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்

Image
NDF Sajith Premadasa 579,822 48.25% SLPP Gotabaya Rajapaksa 532,806 44.34% NMPP Anura Kumara Dissanayaka 41,866 3.48% OTHER 41,943 3.49%

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள்

Image
கோடாபாய முன்னிலையில் SLPP Gotabaya Rajapaksa 347,555 50.81% NDF Sajith Premadasa 285,661 41.76% NMPP Anura Kumara Dissanayaka 29,555 4.32% NPP Mahesh Senanayake

முதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்

Image
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை 18 ஆம் திகதி திங்கள் கிழமை மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருப்பினும் முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சிலவேளை இது நாளை மாலைக்கு முன்னதாக கூட இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்தார். இதேவேளை இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு 80 சதவீதமாக அமைந்திருந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுபேறாகும் என்றும் அவர் தெரிவித்தார். வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்திற்கும் அதிகரிக்கக்கூடும் ஏனெனில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வ

நள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு

Image
இலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்திய புறக்காரணிகளில், கடந்த மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம் ஒன்றாக அமைந்துள்ளது. 2018 ஜனவரி 1 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 153.50 ரூபாவாக காணப்பட்டது. ஆனாலும், இன்றை சூழலில் இந்தப் பெறுமதி 181.00 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் சுமார் 27.50 ரூபா மதிப்பிறக்கத்தை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது. இரண்டாவதாக, இந்த காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை மற்றும் கப்பல் சரக்கேற்றல் விலைகள் 15% அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. மூன்றாவதாக, பணவீக்கம் மற்றும் பொதியிடல் மூலப்பொருட்கள் செலவுகள் அதிகரிப்பு அமைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரப்படி வருடாந்த பணவீக்கம் ச

நாடு பூராகவும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவு

Image
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தளை, குருணாகலை, மாத்தறை, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 66 சதவீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில 77 சதவீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப்பதிவும், கம்பஹாவில் 81 சதவீத வாக்குப்பதிவும் கேகாலையில் 79 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் திருகோணமலையில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல், மொனராகலையில் 84 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 76 சதவீத வாக்குகளும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குகளும், 76 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 75 சதவீத வாக்குக

கல்முனையில் 65% வாக்களிப்பு

Image
நடை பெற்றுக்  கொண்டிருக்கும்  8வது  ஜனாதிபதி தேர்தலில் கல்முனை பிரதேசத்தில் மாலை நான்குமணி வரை 65%வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தெரிவித்துள்ளார் . 5.00 மணிவரை வாக்களிக்கப்பட்டால் 75%ஐ  தாண்டலாம்  என அவர் தெரிவித்தார். மேலும் கல்முனை முஸ்லீம் பிரதேசத்தில் வாக்களிப்பை அதிகரிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களை விரைந்து வாக்களிக்குமாறு பலதடவைகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன .

நாட்டின் சில மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு

Image
இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், திருகோணமலை, குருணாகலை மற்றும் கொழும்பில் 60 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், புத்தளம், கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. காலி மாவட்டத்தில் 67 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்

Image
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 5 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். இதன்படி இன்று காலை 12 மணிவரை  கம்பஹாவில் 40 சதவீத வாக்குப் பதிவுகளும், கண்டியில் 55 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் நுவரெலியாவில் 50 சதவீத வாக்குகளும், காலியில் 50 சதவீத வாக்குகளும் மற்றும் மாத்தறையில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹம்பாந்தோட்டையில் 55% வாக்குகளும், கொழும்பில் 40% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை பொலன்னறுவையில்  52 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 50 சதவீத வாக்குகளும், பதுளையில்  60 சதவீத வாக்குகளும், மொனராகலையில் 55 சதவீத வாக்குகளும், இரத்தினபுரியில் 55 சதவீத வாக்குகளும் மற்றும் புத்தளத்தில் 50 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் களுத்துறையில் 50 சதவீத வாக்குகளும், குருணாகலில் 55 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 56 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 50 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 45 சதவீதமான வாக்குகளும் மற்றும் கேகாலையி

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க விசேட முறைப்பாட்டு பிரிவு

Image
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இந்த காலப்பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு 24 மணித்தியாலமும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க கூடிய வகையில் விசேட முறைப்பாட்டு பிரிவு ஒன்றை அமைத்துள்ளது. தேர்தல் துஸ்பிரயோகம், ஊழல், மோசடி உள்ளிட்ட தேர்தலுடன் தொடர்புடைய எந்த வகையான முறைப்பாடுகளையும் இந்த பிரிவில் தெரிவிக்க முடியும். இவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளின் இரகசிய தன்மையை பாதுகாப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய பின்வரும் இலக்கங்களின் ஊடாக தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும். மேல் மாகாணம் 070-4701141, மத்திய மாகாணம் 070-4701142, வட மேல் மாகாணம் 070-4701143, சப்ரகமுவ மாகாணம் 070- 4701144, வட மத்திய மாகாணம் 070-4701145, தென் மாகாணம் 070-4701146, ஊவா மாகாணம் 070-4701147 மற்றும் மற்றும் கிழக்கு மாகாணம் 070-4701148 ஆகிய இலக்கங்களுடன் முறைப்பாடுகளை அளிக்க முடியும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கேட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

Image
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளன. இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றுள்ளனர். நாடு பூராகவுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு அம்பாறை தயார் நிலையில்!

Image
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, திகாமடுல்ல ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கெடுப்பு நிலையங்களை சென்றடைந்தது முதல் பொலிஸ் நடமாடும் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

16-17 ஆம் திகதிகளில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

Image
நாடு பூராகவும் உள்ள மதுபான சாலைகளை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் இந்த உத்தரவு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதி மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். அதன்படி, மேற்படி உத்தரவை மீறி செயற்படும் நபர்களை தேடி நாடு பூராகவும் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள சுமார் ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.

நாளை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Image
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (15) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (14) பாடசாலை நேரத்தின் பின்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக கிராம உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வாக்களிப்பது எப்படி

Image

கிழக்கு மாகாணத்தில் 1,183,205 வாக்காளர்கள் 1258 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தயார்

Image
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 11 இலட்சத்து 83 ஆயிரத்து 205 (1,183,205) வாக்காளர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 1258 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் 94,781 பேரும், மூதூர் தொகுதியில் 107,30பேரும், சேருவில தொகுதியில் 79,303 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 307 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (398,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள

பொதுமக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை

Image
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளதால் அந்த வெற்றியை கண்ணியத்துடன் அனுபவிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இதுவரையும் எமது தேர்தல் பிரச்சாரங்களை முன்மாதிரியாகவும் மற்றும் கண்ணியத்துடனும் முன்னெடுத்துள்ளோம். அதேபோல், தொடர்ந்தும் தரமான மற்றும் பயனுள்ள அரசாங்கம் ஒன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தல் வெற்றியை மிகவும் கண்ணியத்துடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாடுமாறு பொது மக்களிடம் கோருகின்றேன். நாம் இதுவரை எமக்கு வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் கண்ணியத்துடன் நிறைவேற்றியுள்ளோம். எதிர் தரப்பினர் பல வருடமாக இந்த அரசாங்கத்தினை நடாத்திச் சென்ற போதும் பொதுமக்களுக்கு ஒன்றையும் செய்யாமல் அதிகாரத்தை கோருபவர்களாக உள்ளனர். அதன் காரணமாக இதுவரை பராமரிக்கப்பட்ட முன்மாதிரி நிலையையும் மற்றும் கண்ணியத்தை