நாடு பூராகவும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவு


இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி ​தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, களுத்துறை, கொழும்பு, காலி, மாத்தளை, குருணாகலை, மாத்தறை, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் 80 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 75 சதவீத வாக்குப்பதிவும், யாழ்ப்பாணத்தில் 66 சதவீத வாக்குப்பதிவும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குப்பதிவும், மட்டக்களப்பில 77 சதவீத வாக்குப்பதிவும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப்பதிவும், கம்பஹாவில் 81 சதவீத வாக்குப்பதிவும் கேகாலையில் 79 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் திருகோணமலையில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல், மொனராகலையில் 84 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவில் 76 சதவீத வாக்குகளும், கிளிநொச்சியில் 73 சதவீத வாக்குகளும், 76 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 75 சதவீத வாக்குகளும் மற்றும் மன்னாரில் 71 சதவீத வாக்குகளும் அம்பாறை மாவட்டத்தில் 50 சத வீதவாக்குகளும் பதிவாகியுள்ளன.

முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை கூடுதலான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காணக்கூடிய இருந்ததென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் என்.கே சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார்.

சில இடங்களில் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் மாலை 5.15க்குப் பின்னர் ஆரம்பமாகியிருந்தன. பல மாவட்டங்களில் வாக்குகளை எண்ணும் பணியை இரவு 7 மணியளவில் தொடங்கக்கூடியதாக இருக்கும் என பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை வெளியிட்டார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது