ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் மீண்டும் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதியிடமே ஒப்படைத்தாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு