நாட்டின் சில மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு


இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிவரையில் 70 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 70 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திருகோணமலை, குருணாகலை மற்றும் கொழும்பில் 60 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், புத்தளம், கம்பஹா, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 65 சதவீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

காலி மாவட்டத்தில் 67 சதவீத வாக்குப்பதிவும் யாழ்ப்பாணத்தில் 54 சதவீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி