Posts

நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

Image
கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கம் தினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில், கல்முனை மாநகர சபை  சேவைப்பிரிவில்  மரணித்தோருக்கான மரியாதை நடை பெற்றது 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு - 375 பேர் வைத்தியசாலையில்

Image
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அப்பாவி மக்களை இலக்கு வைக்கும் அடிப்படைவாதத்தை பூண்டோடு ஒழிக்க ஆதர

Image
முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்து பிறமத சகோதரர்களைப் படுகொலை செய்து ஈடேற்றம் பெறலாமென்ற கோட்பாடு இஸ்லாத்தில் இல்லையெனவும் வன்முறைகளிலீடுபடும் எந்த அமைப்புக்களும் இஸ்லாத்துக்கு உரிமை கோர முடியாதெனவும் முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று (22) கொழும்பு தபால் தலைமையகத்தில் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான், சூரா கௌன்ஸில் தலைவர் தாரிக் மஹ்மூத், ஜெம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்ததாவது, சாந்தி மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வன்முறைகளை விரும்புவதில்லை. இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமுமில்லை. மதத்தின் பெயரால் தாக்குதல

வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு

Image
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.  இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

Image
கொச்சிக்கடையில் கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற வேளையில் வேனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றினை சோதனையிட பாதுகாப்பு படையினர் முற்பட்ட போது மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.  பின்னர் அப்பகுதியில் இருந்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்று திரண்ட அவரை தாக்க முற்பட்டுள்ளனர். 

நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்

Image
நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களை அடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

Image
இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  மேலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரிப்பு - 450 பேர் வைத்தியசாலையில்

Image
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 450 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  இதனை நாட்டில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான தேர் திரு விழா இன்று

Image
கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர்  தேவஸ்தான வருடாந்த தேர் திரு விழா இன்று வியாழக்கிழமை (21)  பக்த அடியவர்கள் புடைசூழ விமர்சையாக இடம் பெற்றது. . சிவனடியார்களால் வியந்து பாடப்பெற்றதும் சித்தர்களால் சிவா பூமி என போற்றப்பட்டதும்  ரிஷிகளின் பாதம் பட்ட புண்ணிய பூமியாம்  கிழக்கின் கல்முனை  மாநகரில் அடியவர்கள் இன்னல்கள் களைந்து  அருள் மழை பொழிய கோயில் கொண்டு எழுந்தருளி நவரத்தின கசிந்த சொர்ண சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்  கௌரி அம்பிகை  உடனுறை  சந்தான ஈஸ்வரப்பெருமான் தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு விநாயகர் வெளிப்பாட்டோடு ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு சந்தான ஈஸ்வரப்பெருமான் தேரில் ஆரோக்கரித்து வீதி உலா இடம் பெற்றது. கடந்த திங்கட் கிழமை (11) கொடியேற்றத்துடன் ஆரம்பமான கிரியைகளை தொடர்ந்து மூன்று நாட்கள் திரு விழாக்கள் நடை பெற்று  ஐந்தாம் நாள் சடங்கான மாம்பழத்திருவிழா  திரு விளக்கு பூஜை  பக்தி முக்தி திரு விழாக்கள் நடை பெற்று   திங்கட் கிழமை (18)  வேட்டைத்திரு விழாவும்  நடை பெற்றது.  செவ்வாய்க்கிழமை (19) திருக்கல்யா

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடமையை பொறுப்பேற்றார்

Image
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை வெள்ளிக்கிழமை நாரஹேன்பிட்டிலுள்ள அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில்  முன்னாள் கல்முனை மாநகர  முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  கடமையை பொறுப்பேற்றார்.இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்  அமீர் அலி, பிரதி அமைச்சர்  மஃறூப் ,பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்  இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள தீயணைப்புச் சேவையின் தீயணைப்பாளர் பதவிக்கான நியமனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

Image
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் மிக நீண்ட காலமாக தீயணைப்புச் சேவையில் கடமையாற்றியவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் மாகாணத்தின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குற்பட்ட 66பேருக்கே இந் நியமனங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நற்பிட்டிமுனை தாஹிர் ஜெஸான் !! கல்முனையில் முதல் பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியானார்.

Image
அல்-கரீம் பவுண்டேஸன் “சாதனை மங்கை “ பட்டம்  வழங்கி கெளரவிப்பு  நற்பிட்டிமுனை கிராமத்தைச் சேர்ந்த தாஹிர் ஜெஸான் 2017 இல் நடை பெற்ற இலங்கை நிருவாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகத் தேர்விலும் தெரிவாகி  அகில இலங்கை ரீதியில் 55வது இடத்தைப் பெற்று நிருவாக சேவை அதிகாரியானார். இவர் நாளை  2019-03-05ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை அரச நிருவாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.  1990.01.26ஆம் திகதி நற்பிட்டிமுனை கிராமத்தில்  பிறந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் உயர்தரம் வரை கற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழத்தில் வணிகத்துறை பீடத்தில் கற்று பட்டணமும் நாடும் பல்வகைத் திட்டமிடல் பட்டதாரியாகி நகர அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றினார்  அதன் பின்னர் அப்  பதவியை விட்டு விலகி 2017ஆம் ஆண்டு முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தைப் பெற்று கல்முனை பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிலையிலேயே இலங்கை நிருவாக சேவை அ

நற்பிட்டிமுனை நபீஸா ஆசிரியை ஓய்வு !! அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு !!!

Image
35 வருடம் ஆசிரியத் தொழிலை  புனிதமாக  நிறைவேற்றி  ஓய்வு பெற்ற  நற்பிட்டிமுனை ஆசிரியை  திருமதி   எஸ்.என்.எச்.முகம்மட் (Nafeesa Teacher) அவர்களின் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழாவும் ,கல்வி சமூக சேவைக்கான தேசாபிமானி விருது வழங்கும் விழாவும்  ஆசிரியை நபீசாவின்  இல்லத்தில் இடம் பெற்றது . கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அல் -கரீம் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சி.எம். முபீத்தின்  ஏற்பாட்டில் அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவர் சி.எம்.ஹலீம்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் நபீஸா ஆசிரியையின் கணவர் ஹயாத் முகம்மட் அவரது புதல்வர்கள்  அவரது குடும்பத்தினர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பா வாசித்து  வாழ்த்து மடல் வழங்கி  தேசாபிமான பட்டம் சூட்டி ,நினைவு பரிசு வழங்கி வைத்தனர் .

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு.

Image
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளும், சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும் அண்மையில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். தங்களின் பிரதேசம் நீண்டகாலமாக அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கபட்டதாகவும் , மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு நகரசபை கோரிக்கையை முன்வைத்த நாளிலிருந்து அரசியல்வாதிகளால் நாங்கள் புறக்கணிக்கபடுகிறோம். இதனால் இப்பிரதேசம் அபிவிருத்திகளில் பின்தங்கியுள்ளது என குறிப்பிட்டனர் . மேலும் இச் சந்திப்பில் பாடசாலை ,கல்வி அபிவிருத்தி சுகாதாரம் வைத்தியம் ,விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த விடயங்களை செவிமடுத்த ஆளுநர் அவர்கள் இந்த விடயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து பாடசாலை மற்றும் ஏனைய துறைகளுடைய முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததோடு இவ்விடயம் தொடர்பான செயலாளர்கள், பணிப்பாளர்கள் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து குறிப்பிட்ட பிரதேச அறிக்கைகளை உடனடியாக சமர்பித்து அவசரமாக இந்த பிரச்சனைகளுக்க

8 பல்கலை மாணவர்களும் விடுதலை; தலா ரூ. 52 ஆயிரம் அபராதம்

Image
ஹொரவபொத்தானை, கிரலாகல புராதன தூபி மீது ஏரி எடுத்த புகைப்படம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று (05) கெபித்திகொல்லாவ நீதிமன்றம் விடுவித்துள்ளது. கெபித்திகொல்லாவ நீதவான் எச். கே. மாலிந்த ஹர்சன த அல்விஸ்  முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்கள் மீதுமூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.  குற்றச்சாட்டிற்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார். எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன்,  சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப்குழுவினர் கெபித்திகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர். இதனையடுத்து அவர்கள் மீது 3குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் முதலாவது குற்றச்சாட்டில் மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் சார்பில்

71 வது சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ். கொட்டும் மழையிலும் நனைந்து நிகழ்வில் பங்கேற்றார்

Image
கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப் மரியாதையும் கலை நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத், ஜயந்த விஜேசேகர அரசியல்  பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இந்றைய நிகழ்வில் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயண்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது.