சம்மாந்துறையில் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு நிரந்தர கட்டிடம்
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸின் கோரிக்கைக்கு ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் இணக்கம் சம்மாந்துறை பிரதேச சபை அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிஹாமா சியாஸின் வேண்டுகோளுக்கமைய சம்மாந்துறை அல் - அர்ஷாத் மகாவித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் நலன் கருதி ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் சகல வசதியும் கொண்ட நிரந்தரக் கட்டிடமொன்று அமைப்பதற்கும் , சம்மாந்துறை வண்டு வாய்க்காலுக்கு மேலாக பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்படுள்ளது . சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் ஜப்பான் நாட்டுக்கான தூதரகத்துக்கு குறித்த வேலைத் திட்டங்கள் தொடர்பாக திட்ட முன் மொழிவொன்றை வழங்கி குறிப்பிட்ட இரு வேலைத்திட்ட்ங்களையும் நிர்மாணிக்க உதவுமாறு கேட்டிருந்தார் . சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் விடுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (11.12.2018) சம்மாந்துறைக்கு விஜயம் செய்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சிஹாமா சியாஸ் தலைமையி