Posts

வாக்களித்த நற்பிட்டிமுனை மக்களுக்கு SLMC துரோகம்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கல்முனை மாநகரசபையின் முதல்வராக செயற்பட்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அண்மையில் தான் வகித்த முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் போன்ற பதவியில் இருந்து விலகி அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசியகாங்கிரசில் இணைந்து கொண்டதன் காரணமாக சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபையில் வகித்த உறுப்பினர் பதவி வெற்றிடமாக  உள்ளது   முதல்வராக  சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டார். நிஸாம் காரியப்பர் முதல்வராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையின் பிரதி முதல்வருக்கான வெற்றிடமும் காணப்பட்டது. கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  விலகிச்சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரையும் எவரையும் நியமிக்காத நிலையில், தெரிவு வாக்குகள் அடிப்படையில் அடுத்த நிலையில் இருக்கும் நற்பிட்டிமுனையை சேர்ந்த  யு.எல்.தௌபீக்  என்பவருக்கு  வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறன சூழ்நிலையில் குறித்த வெற்றிடத்தை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவர

கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா

Image
கல்முனை அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று  கல்லூரியின் மன்னர் பைசல் மண்டபத்தில் இடம்பெற்றது.  அல்-ஹாமியா அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் யூ.எல்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட பீடாதிபதி அஷ்-ஷெய்க் ஏ. அலியார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் தலைவருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஏ.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாவும் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  இதன்போது பட்டமளிப்பு விழாவுக்கான மலர் பிரதம அதிதியினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கல்லூரியின் பழைய மாணவர்கள் மூவர் சர்வதேச ரீதியில் கல்லூரிக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்வில் 62 மாணவர்களுக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.

கல்முனையில் மோட்டார் சைக்கள் களவு, கொழும்பை சேர்ந்த சிங்களவர் கைது

Image
கல்முனையில் மோட்டார் சைக்கள்  களவாடிய  கொழும்பை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை கல்முனை பொலிசார் மோடார் சைகளுடன் கைது செய்துள்ளனர்  சாய்ந்தமருதை சேர்ந்த ஆதம் பாவா நௌசாத் என்பவருடைய  EP  HE -2587 இலக்க  சிவப்பு நிற ஸ்பிளண்டர்  ரகத்தை சேர்ந்த  மோடார் சைக்கள்  கல்முனை மேடி லேன்ட் தனியார் வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போது  கடந்த 18 ஆந்  திகதி காணாமல் போனது .இது தொடர்பான முறைப்பாடு கல்முனை பொலிஸ்  நிலையத்தில் உரியவரால் பதியப்பட்டுள்ளது. இந்த களவு தொடர்பாக கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி கப்பாரின் வழிகாட்டலில் பெருகுற்ற தடுப்பு பொறுப்பதிகாரி போ.ப.சோமகுமார ,சாஜன் முஸ்தபா  ஆகியோர்  சுற்றுலா கடமைக்கு சென்ற வேளை  நேற்று 22 களவாடப்பட்ட  மோடார் சைக்கள் பெரிய நீலாவணை  சுனாமி வீட்டு திட்ட பிரதேசத்தில் வைத்து  கண்டு பிடித்துள்ளனர் .  இந்த மோட்டார் சைகளை களவாடியதாக சந்தேகிக்கப் படும் விஜய சுந்தர சுசந்த குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவர் கொழும்பு வெள்ளவத்தை  பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர் . சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட

ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள்

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று சனிக்கிழமை பதுளை ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பு தொடர்பில் நாம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீனை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் எமக்கு இப்படி தெரிவித்தார் , இந்த சந்திப்பில்   முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டில் முஸ்லிம்கள் மிகவும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் வாழ்வது தொடர்பிலும்,  முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள அச்சசூழ்நிலை தொர்பிலும், இன வெறுப்பு பிரசாரதுக்கு எதிராக சட்டத்தை சட்டவாக்கம் செய்து அமுல்படுத்துவது   தொர்பிலும்  அண்மைய வன்முறைகள் தொடர்பிலும் அழுத்தமாக ஜனாதிபதிக்கு எடுத்து கூறினோம்   . ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பிரதிப் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன்யிடம்  இவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்   ,முஸ்லிம் பிரதேசங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி  உத்தரவிட்டார். அண்மைய வன்முறைகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகுழு ஒன்றை நியமித்து அதன் மூலம் சயாதீன விசாரணைகளை மேற்கொள்ளப் பட

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை

Image
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாக பல முக்கிய முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம் எதிர்ப்பு மோதல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த நாடுகள் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் உள்ள பங்களாதேஷ், ஈரான், ஈராக், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், கட்டார் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளன. இந்த நாடுகளில் பலவற்றில் இலங்கைத் தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருவதால், அந்நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டால், அது அங்கு பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களை பாதிக்கும். எவ்வாறாயினும், முஸ்லிம் நாடுகள் வீசா கட்டுப்பாடுகளில் திருத்தங்களை செய்யப் போவதாக விடுக்கப்பட்டதாக கூறப்படும் எச்சரிக்கை பற்றி தமக்கு தெரியவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து

பாணந்துறை நோலிமிட் எரியூட்டல் இப்போது என்ன நடக்கிறது ? முழு விபரம்

Image
நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இன்று (21) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு   படையினர் கொண்டுவந்த தண்ணீர் போதாமை காரணமாகவே தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அவர்களால் முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது . முழு கட்டடத்ததையும் காலை 5.30 க்கு தீ முழுமையாக  சாம்பராக்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தீ பரவியவேளையில் அந்த கட்டடத்திலிருந்த எழுவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பெற்றோல் குண்டுத் தாக்குதல் இன்று அதிகாலை 3 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மூலமே குறித்த தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீ வேகமாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது 3 மணியளவில் தனக்கு தொடராக 6 வெடிச்சத்தங்கள் கேட்டதாக, குறித்த கட்டடத்துக்கு அருகாமையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும் எனத் அமைச்சர் ஹகீம் தெரிவித்தார்  ரவூ

வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்துத் துரத்திய பொலிஸார்

Image
வவுனியாவில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாமல் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தியுள்ளனர். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பை சேர்ந்த சில தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமயமே இச் சம்பவம் இடம்பெற்றது. இந்நிலையில்,  அவ் விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தார். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது கோரிக்கைக்கு செவி சாய்காக்காது, அளுத்கம சம்பவத்திற்கு நீதியான விசாரணை நடத்து, முஸ்லிம் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடு, முஸ்லிம்களை தாக்காதே என் கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு வருகை தந்த வவுனியா தலைமை பொலிஸ் நிலையதத்தின் பொறுப்பதிகாரி சன் அபயரத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இவ்விடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது எனவும் அவர்கள் வைத்திருந்த பதாதையையும் பறிமுதல் செய்திருந்தார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பி பொலிஸாருடன் முரண்பட்டுக்கொள்ள ஒரு சிலரை பொலிஸார் இழ

ஐ.நா அரசியல் விவகார உதவிச் செயலாளரிடம் நான் இன்று என்ன கூறினேன் விளக்குகிறார் -ஹக்கீம்

Image
ஐக்கிய நாடுகள் சபையின்  அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ வெள்ளிக்கிழமை (20) மாலை இலங்கைக்கான  ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய்   நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரமாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் கூறியவையாவன: அண்மையில் அளுத்கமை, தர்கா டவுண்,பேருவளை சீனன்கோட்டை மற்றும் அண்டியுள்;ள பிரதேசங்களில் நடைபெற்ற  இனவாத வன்செயல்களின் பின்னணியில் அமைந்த பல விடயங்களை தெரிவித்திருக்கிறேன்.; மக்களை ஆத்திரமூட்டி வன்செயல்களை தூண்டிய இனவாத அமைப்புகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை அவற்றை மேற்கொண்டோருக்கெதிராக குறிப்பாக பொலிஸாரும்,அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதை பற்றி சுட்டிக்காட்டி, இவ்வாறான வன்செயல் புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் பின்புலம் பற்றி விளக்கம் அளித்தே விளக்கம் அளிக்கப்பட்டது. மற்ற சமூகங்களை இழிவு

பாடசாலை மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப்பட்டு சீருடை வழங்கும் நிகழ்வு

Image
கல்முனை பொலிஸ்  பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப்பட்டு சீருடை வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இடம் பெற்றது.  நிகழ்வில் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட 14 பாடசாலைகளை  சேர்ந்த மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு  கல்முனை  பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார்  தலைமையில் நடை பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை உதவி பொலிஸ்  அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் கலந்து கொண்டார் . சீருடைகளை வழங்கிய அனுசரண யாளர்களாக  சொர்ணம் நகை மாளிகை உரிமையாளரும்  ,ஹட்டன் நெசனல்  வங்கி,அமானா வங்கி முகாமையாளரும் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.. பாடசாலைகளின் அதிபர்கள்,மாணவர்கள் அடங்கலாக பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் . வீதி ஒழுங்கு பயிற்சி வழங்கப் பட்ட மாணவர்கள்  பாடசாலைகள் முன்பாகவுள்ள வீதி கடவைகளில் கடமையாற்றுவர் எனவும் அவர்களுக்கு உதவியாக பொலிசாரும் செயல் படுவர் எனவும் கல்முனை உதவி பொலிஸ்  அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் அங்கு தெரிவித்தார். அனுசரணை யாளர்களுக்கு பொலிசாரினால் நினைவு சின்னங்களும் வழங்கப் பட்டன 

அதாவுல்லா அளுத்கம மக்களை சந்தித்தார்

Image
பொதுபல சேனா அமைப்பினால் மிகவும் கொடூரமானமுறையில் தாக்கப்பட்டு வீடுகளையும் வியாபார நிலையங்களையும் ஏனைய உடமைகளையும் பெறுமதி மிக்க உயிர்களையும் இழந்த அளுத்கம,தர்கா நகர் போன்ற பிரதேசங்களுக்கு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று விஜயம் செய்திருந்தார். இதன்போது அங்கு ஏற்பட்ட அழிவுகளை பார்வையிட்ட அமைச்சர் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுடன் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடினார். 

அளுத்கம் சம்பவத்தைக் கண்டித்து சம்மாந்துறையில் மாபெரும் கண்டன ஊர்வலம்!

Image
அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சம்மாந்துறை சலாமிய இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் பிரதேச சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் பாரிய கண்டன ஊர்வலம் ஜூம்ஆத் தொழுகையை அடுத்து இடம்பெற்றது  அமைதியான முறையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய், பொதுபல சேனாவை தடைசெய், ஞானசாரவை கைது செய் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு தனது எதிர்ப்புக்களை வெளிக்காட்டினா். ஊா்வலகத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழா

Image
(அகமட் எஸ். முகைடீன்) மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டடம் வெகு விமர்சையாக நேற்று முந்தினம் திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு சர்வதேச “எட்ஹட்” நிறுவனத்தின் உயர் டிப்லோமா கற்கை நெறிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கல்லூரியின் புதிய அடுக்கு மாடி கட்டடம் மலேசிய நாட்டுத் தூதுவர் அஸ்மி சைனுடீனால்  திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாலைதீவு நாட்டின் துணைத் தூதுவர் கலாநிதி ஹூசைன் நியாஸ் மற்றும் முதல் செயலாளர் அகமட் முஜ்தபா, லண்டன் “எட்ஹட்” நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி ஏன் லதான், லண்டன் பக்கிங்ஹம்செயா பல்கலைக் கழகத்தின் முதன்மை விரிவுரையாளர் அலன் கிழாக், “எட்ஹட்” நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி வினாயகமூர்த்தி ஜனகன், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தயந்த எஸ். விஜேசேகர  மற்றும் மெற்றோபொலிடென் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள்