நாட்டில் மழை வேண்டி பிரார்த்தனை புரியுமாறு பிரதம மந்திரி தி .மு.ஜெயரத்ன வேண்டு கோள்
நாட்டில் கடுமையான வரட்சி ஆலயங்கள் தோறும் மழை வேண்டி பிரார்த்தனை புரியுமாறு புத்தசாசன அமைச்சரும் பிரதம மந்திரியுமான தி .மு.ஜெயரத்ன சகல மத தலைவர்களிடமும் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதன் பிரகாரம் இன்று மழை வேண்டி ஆலயங்கள் தோறும் மதவழிபாடுகள் இடம் பெறவுள்ளன . கல்முனை பிரதேசத்தின் பிரதான நிகழ்வு கல்முனை குடி முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடை பெறவுள்ளது . இதன் போது பொதுமக்கள் கலந்து கொண்டு மழை வேண்டி விசேட தொழுகை நடாத்தி பிரார்த்தனை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .